நிலத்துக்கு அடியில் பசுமை பண்ணை: வறட்சியை விரட்டிய பொலீவிய விவசாயிகள்

அல்டிபிலனோ,
    • எழுதியவர், இன்மா கில் ரோஸெண்டோ
    • பதவி, பிபிசி முண்டோ

அல்டிபிலனோ, உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான பீட பூமிகளில் ஒன்று. வறட்சியில் இருந்தும், திடீர் வெள்ளத்தில் இருந்தும், அதிகரிக்கும் வெப்பநிலையில் இருந்தும் தங்களது பயிர்களைக் காப்பதற்காக பொலிவிய நாட்டு விவசாயிகள் பூமிக்கு அடியில் விவசாயம் செய்கின்றனர்.

காலநிலை மாற்றத்திற்குக் குறைந்தபட்சம் பொறுப்புள்ள நாடுகளில் ஒன்றாக பொலீவியா இருந்தாலும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை அதிகளவில் பாதிக்கப்படுகின்றது.

கிட்டதட்ட 60% பொலிவிய விவசாயிகள் அல்டிபிலனோ பீடபூமியில் வாழ்கின்றனர். இப்பகுதி வறட்சி, உறைபனி, அதிக காற்று மற்றும் கதிர்வீச்சு ஆகியவற்றுக்குப் பெயர் போனது.

அல்டிபிலனோ,
படக்குறிப்பு, அல்டிபிலனோவில் நதிகள் வறண்டு போய் உள்ளது

இங்கு, பாரம்பரிய விவசாய முறையான நிலத்தில் விவசாயம் செய்தால், அரிதான மழை மற்றும் மண் அரிப்பினால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

தங்கள் குடும்பம் மற்றும் கால்நடைகளுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சில பொலீவிய விவசாயிகள் நிலத்துக்கு அடியில் பசுமை வயல்களை உருவாக்கியுள்ளனர். இந்த வகை நிலத்துக்கு அடியில் உள்ள வயல்களை 'வலிபினிஸ்' என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.

இந்த வலிபினிஸில் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதன் மேற்கூரை மட்டும் வெளியே தெரிகின்றது. ஆனால், வறண்ட பூமியில் இருந்து பிரித்து அறியமுடியாதபடி இந்த வயல்கள் உள்ளது.

கேப்ரியல்
படக்குறிப்பு, கேப்ரியல்

இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது வலிபினிஸை உருவாக்கிய விவசாயி கேப்ரியல், இந்த முறை விலை மலிவானதாகவும், எளிதாகவும் உள்ளதாக கூறுகிறார். பணத்தைச் சேமிக்கவும், தனது ஐந்து குழந்தைகளுக்கு உணவளிக்கவும் இது உதவுவதாக அவர் கூறுகிறார்.

''நாங்கள் சந்தையில் இருந்து காய்கறிகளை வாங்குவதில்லை. நாங்களே காய்கறிகளை விளைக்கிறோம்'' என்கிறார் கேப்ரியல்.

அதிகரிக்கும் வெப்பநிலையாலும், ஒழுங்கற்ற மழையாலும், வெளிப்புறத்தில்(நிலத்தில்) விவசாயம் செய்வது சாத்தியமற்றது என்கிறார் அவர்.

விவசாயம்

வெளியே என்ன வெப்பநிலை இருந்தாலும், நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் வலிபினிஸ் நிலையான நுண் தட்பவெப்பநிலையை வைத்திருக்கும்.

இது இப்பகுதியின் பண்டைய விவசாய முறை அல்ல. இந்த தொழில்நுட்பம் சுவிட்சர்லாந்து தன்னார்வலர் பீட்டர் ஐசல்லி என்பவரால் 25 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.

கிராமப்புற மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக பீட்டரின் திட்டத்திற்கு ஐரோப்பிய மேம்பாட்டு நிதியகம் நிதியளித்தது.

கேப்ரியல்

முழுமையாக செயல்படும் ஒரு நிலத்தடி பண்ணையை பீட்டர் உருவாக்கினார். ஆனால், பீட்டரின் சோதனை பண்ணைக் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தொழிலதிபர் மைக்கேல் ஜெமியோ கார் இப்பகுதி வழியாகச் சென்றபோது, அவரது கார் பழுதானது. உதவி தேடி கைவிடப்பட்ட தோற்றமுள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு மைக்கேல் சென்றார். ''விற்பனைக்கு'' என்று எழுதப்பட்ட ஒரு பலகை மட்டுமே பண்ணை வீட்டின் வெளியே இருந்தது.

மைக்கேல் ஜெமியோ
படக்குறிப்பு, மைக்கேல் ஜெமியோ

இது அவருக்கு மற்றும் அவரது குடும்பத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க பயணத்தின் தொடக்கமாக இருந்தது.

விவசாயம் குறித்து எதுவும் அறியாத மைக்கேல், தொலைதூர பகுதியான எல் ஆல்டோவில் பண்ணையை வாங்க முடிவு செய்தார். தற்போது 18 வலிபினிஸ் உட்பட, பல பண்ணைகளை இங்கு நிர்வகித்து வருகிறார் மைக்கேல்.

இவருடன் பல உள்ளூர் விவசாயிகளும், எந்தக் காலநிலையிலும் பழங்கள், காய்கறிகள் மற்றும் சாலட் இலைகளை மிக அதிக அளவில் உற்பத்தி செய்கின்றனர்.

வலிபினிஸை அமைப்பது எப்படி?

ஒரு மீட்டர் ஆழத்திற்குத் தோண்ட வேண்டும். வடிகட்டுவதற்காகக் கற்களை நிரப்ப வேண்டும். பண்ணையைச் சுற்றி நான்கு செங்கல் சுவர்கள்யும், ஒரு கதவையும், காற்றோட்டத்திற்கு ஒரு ஜன்னலையும் அமைக்க வேண்டும். 30 டிகிரிக்கு ஒரு கூரை அமைக்க வேண்டும். அதற்கு மேலே, நாள் முழுவதும் சூரிய ஒளியை உறிஞ்சுவதற்கு கிழக்கு பார்த்தார் போல உயரமான சுவரை அமைக்க வேண்டும்.

பசுமை பண்ணை

வழக்கமான பசுமை பண்ணைகளுடன் ஒப்பிடுகையில், வல்பினிஸ் மலிவான மற்றும் மிகவும் பயனுள்ள பண்ணையாக உள்ளது. ஆனால், இந்தப் பண்ணைகளை நீண்ட கால திட்டமாகச் செயல்படுத்த வேண்டும்.

வல்பினிஸ் பண்ணை குறைந்தளவு தண்ணீரில் செயல்படக்கூடியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :