You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மசூதிகளை மூடி, மதகுருக்களை நாடுகடத்தும் ஐரோப்பிய நாடு
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி அளிக்கப்படுகின்ற ஏழு மசூதிகள் மற்றும் பல மத நிறுவனங்களை மூடுவதோடு, சுமார் 50 இஸ்லாமிய மத குருக்களை நாடுகடத்தப்போவதாக ஆஸ்திரியா கூறியுள்ளது.
மைய நீரோட்டத்தோடு இணையாத சமூகங்கள் ஆஸ்திரியாவில் இருப்பதற்கு இடமில்லை என்று விளக்கிய அந்நாட்டின் சான்செலர் செபாஸ்டியன் குர்ஸ், அரசியல் சார்புடைய இஸ்லாமை தடுக்கின்ற நடவடிக்கை இதுவென தெரிவித்திருக்கிறார்.
துருக்கியால் ஆதரவு அளிக்கப்படும் பல மசூதிகள் உள்பட பல இடங்களில் அதிகாரிகளால் புலனாய்வு நடத்தப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல் உலகப்போரின்போது நிகழ்ந்த கலிபோலி சண்டையை, மூடப்படுகின்ற மசூதிகளில் ஒன்றில் நாடகமாக அரங்கேற்றி நடித்துக்காட்டியது சர்ச்சையை உருவாக்கியது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அது குறித்த படங்கள் வெளிவந்திருந்தன.
துருக்கி படையினரைப்போல ஆடை அணிந்து சிறார்கள் அந்த நாடகத்தில் நடித்திருந்தனர்.
இந்த நடவடிக்கை ஆஸ்திரியாவில் தொடர்ந்து நிலவும் இஸ்லாம் மீதான பயம் மற்றும் இனவெறி பிரதிபலிக்கிறது என்று துருக்கி அதிபரின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கலின் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமூகங்களை இலக்கு வைத்து இழிவான அரசியல் நடத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்:
- 12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி: யார் இந்த ஈஸ்வரி ராவ்?
- தலை வெட்டப்பட்ட பிறகும் கொத்திய பாம்பு : கடிபட்டவருக்கு தீவிர சிகிச்சை
- திருமணத்துக்கு அஞ்சும் இளைஞர்கள்: சரியும் பிறப்பு விகிதம் - காரணம் என்ன?
- டிரம்ப்-கிம் உச்சி மாநாடு நடைபெற சென்டோசா தீவை தேர்ந்தெடுத்தது ஏன்?
- சுவையான, தரமான உணவு வேண்டுமா?: 10 முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்