You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குவாட்டமாலா: எரிமலை வெடித்ததில் 62 பேர் பலி
குவாட்டமாலாவிலுள்ள பேகோ என்ற எரிமலை வெடித்ததில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவாட்டமாலாவின் தலைநகரான குவாட்டமாலா சிட்டிக்கு தென்-மேற்கு திசையில் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த எரிமலையானது வானத்தை நோக்கி கரும் புகையையும், சாம்பலையும் வெளியிட்டு வருகிறது.
ஒரு பெரும் ஆறு போன்று வெளியேறிய எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல் ரோடியோ என்ற கிராமத்தை சூழ்ந்து நகர்ந்ததில் அங்கிருந்த வீடுகளும், அதிலிருந்தவர்களும் தீயில் சிக்கி பலியாயினர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான கான்ரெட் தெரிவித்துள்ளது.
எரிமலை தொடர்ந்து கக்கி வரும் சாம்பலின் காரணமாக குவாட்டமாலா நகரத்திலுள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
தேசிய அளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 1974ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு என்று உள்ளூர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
"துரதிஷ்டவசமாக எல் ரோடியோ கிராமம் லாவாவினால் அழிந்துவிட்டது. அதே வேளையில், லாவாவால் சூழப்பட்டுள்ள மற்றொரு கிரமமான லா லிபேர்ட்டட்டை எங்களால் இன்னும் நெருங்க முடியவில்லை. எனவே, அங்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறோம்" என்று தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவரான செர்ஜியோ கேபனாஸ் உள்ளூர் வானொலி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்