இரான் அணுத்திட்டம் குறித்து புதிய ஒப்பந்தம்: அமெரிக்கா மற்றும் ஃபிரான்ஸ் பேச்சுவார்த்தை

இரான் அணு திட்டம் குறித்து புதிய ஒப்பந்தங்கள் ஏற்படலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஃபிரான்ஸ் அதிபர் மக்ரூங் தெரிவித்துள்ளனர்.

இரான் அணு திட்டம் குறித்து புதிய ஒப்பந்தம்: அமெரிக்கா மற்றும் ஃபிரான்ஸ் பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

2015ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து பேசிய டிரம்ப், அதை விட சிறப்பான ஒரு ஒப்பந்தம் உருவாகலாம் என தெரிவித்தார்.

இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் மத்திய கிழக்கில் அதன் பங்கு ஆகியவை அடங்கிய புதிய ஒப்பந்தம் போடப்படும் என அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஃபிரான்ஸ் அதிபர் மக்ரூங் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு இரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை தளர்த்துவதற்கான பதில் நடவடிக்கையாக தனது அணு திட்டங்களை இரான் தற்காலிமாக நிறுத்தி வைத்திருந்தது.

ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினால் "மோசமான விளைவுகளை" சந்திக்க நேரிடும் என இரான் எச்சரித்துள்ளது.

ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், இரான் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நாடுகளாக கருதப்படும் நாடுகளுக்கு இடையே போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியாது என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி வருகிறார்.

அதற்கான காலக்கெடு மே 12 எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற கூடாது என மக்ரூங் டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்கல் வெள்ளியன்று அமெரிக்காவிற்கு விஜயம் செய்து ஒப்பந்தத்தை நிராகரிக்கக் கூடாது என டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினால் இரான் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் என இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவட் ஷெரிஃப் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை டிரம்ப் ஏன் மறுத்து வருகிறார்?

2015ஆம் அண்டு போடப்பட்ட அந்த ஒப்பந்தம் ஏமன், சிரியா மற்றும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளை உள்ளடக்கி இருக்க வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். எனவே அந்த ஒப்பந்தம் "பைத்தியக்காரத்தனமானது" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இரான், ஐரோப்பா, ரஷியா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், இரான் தீவிரவாத அமைப்பான ஹெஸ்பொல்ல அமைப்புக்கு வழங்கும் ஆதரவை தடுக்கவில்லை என நீண்ட காலமாக டிரம்ப் புகார் கூறி வருகிறார்.

தற்போதைய ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: