You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா: பாதுகாப்பானது என கருதப்பட்ட குகை மருத்துவமனையில் தாக்குதல்
மத்திய சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில், பாறைக்கு 20 மீட்டார் அடியில் கட்டப்பட்ட மருத்துவமனை ஒன்று, சக்தி வாய்ந்த வான் தாக்குதலால் பலத்த சேதமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹமா மாகாணத்தில் உள்ள அந்த மருத்துவமனை சிறப்பான பாதுகாப்பிற்குள் இருப்பதாக கருதப்பட்டது ஆனால் வியாழக்கிழமையன்று அதன் செயல்பாடுகள் முடங்கின.
இந்த தாக்குதலில் உயிர் சேதங்கள் ஏதும் இல்லை ஆனால் சிரியாவில் மருத்துவமனைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது மோசமான தாக்குதல் என உதவி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் முற்றுகையிடப்பட்ட பகுதிகளில் இனி உதவிகளை மேற்கொள்ள முடியாது என ஐ.நா., தெரிவித்துள்ளது.
வியாழனன்று நடைபெற்ற தாக்குதலில் காஃபர் சிட்டா நகரில் உள்ள அல் மகஹாரா குகை மருத்துவமனையை ஐந்து ஏவுகணைகள் தாக்கியது என மருத்துவ பராமரிப்பு மற்றும் நிவாரண அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவமனை சிரியாவில் மிகவும் பாதுகாப்பான மருத்துவமனையாக கருத்தப்பட்டது என மருத்துவ பராமரிப்பு மற்றும் நிவாரண அமைப்புகளின் ஒன்றியத்தின் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சத்தம் கேட்டவுடன் நோயாளிகளும் பணியாளர்களும் பாதுகாப்பான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் உயிர் சேதம் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்