You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடும் பனிப்பொழிவால் பிரிட்டனில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடும் பனிப்பொழிவின் காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகளில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வான்வழி, ரயில் மற்றும் தரைவழி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
வட அயர்லாந்திலும், ஸ்காட்லாந்திலும் பனிப்பொழிவு இருக்குமென்றும், மற்ற இடங்களில் இரவு முழுவதும் பனியின் தாக்கம் இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கு "விழிப்புடன் இருப்பதற்கான" மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதுள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகள் திங்களன்று மூடப்படும்.
ஹீத்ரூ உட்பட பல விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஓடுபாதைகளில் படிந்துள்ள பணியை அகற்றுவதற்காக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவை புகைப்படம் எடுத்து பிபிசி நேயர்கள் பகிர்ந்துள்ளனர்.
பிற செய்திகள்
- ஜப்பானில் அதிக நேரம் வேலை செய்பவர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆளில்லா விமானம்
- வெனிசுவேலா: அதிபர் தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகளுக்கு தடை
- தமிழக ஸ்டூடியோ புகைப்படங்களை காப்பாற்ற இணைந்த கைகள்
- பிரிட்டனில் இந்திய குடும்பங்களை குறிவைத்து நடத்தப்படும் திருட்டு
- தெலங்கானா: புதிய மருந்துகள் பரிசோதனையில் உயிரிழப்பு, மனநலப் பாதிப்புகள் எனப் புகார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்