You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதி கூட்டுப்படையின் வான்வழி தாக்குதல்: ஏமனில் 26 பேர் பலி
சௌதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹூதி கிளர்ச்சியாளர்களிள் வலுவிடமான ஏமனின் வட மாகாணமான சாதாவில், குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஏமனில் இருந்து வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஹார் மாவட்டத்தில் ஒரு ஹோட்டலையும், மக்கள் நெரிசல் மிகுந்த சந்தையையும் பாதித்த இந்த வான் தாக்குதல், உருக்குலைந்த உலோகங்களின் குவியலாக அந்த இடத்தை மாற்றியுள்ளது.
இந்த உள்நாட்டு போரில் ஏமன் அரசுக்கு ஆதரவு வழங்கும் சௌதி தலைமையிலான கூட்டுப்படை சந்தைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் நடத்தியுள்ள தாக்குதல்கள் மூலம் மக்கள் பலரின் உயிரை பலிவாங்கியுள்ளது.
ஆனால் மக்களை வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்கவில்லை என்கிறது சௌதி கூட்டுப்படை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்