நிகாப் அணிய தடை: மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு

பட மூலாதாரம், Reuters
பெல்ஜியம் அரசு, இஸ்லாமியப் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் துணியை அணிவதற்கு 2011-ம் ஆண்டு விதித்த தடையை மீறி முகத்தை மறைக்கும் துணியை தொடர்ந்து அணிந்து, அத்தடைக்கு எதிராக வழக்குத் தொடுத்த , இரு முஸ்லிம் பெண்கள் தங்களில் சவாலில் தோல்வியடைந்துள்ளனர்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து, அபராதம் மற்றும் சிறை தண்டனையைக் குறித்த அச்சுறுத்தலைத் தவிக்க ஒரு பெண் வேறுவழியின்றி நிகாப் அணிவதை நிறுத்தியதாகவும், மற்றொரு பெண் வெளியில் செல்லாமல் வீட்டிலே நிரந்தரமாக தங்கிவிட்டதாகவும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் இரு பெண்களும் கூறியிருந்தனர்.
தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கான உரிமைகள், மதம் மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக, அப்பெண்களின் கூற்றுகளை ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள நீதிமன்றம் நிராகரித்தது.
முகத்தை மறைக்கும் துணியை அணிவதற்கு எதிரான சட்டத்தால், மற்றவர்களை விட சில முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்படலாம், ஆனால், அது பொது ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய தேவைக்கு பொருத்தமானது என நீதிமன்றம் கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












