1 நிமிட மௌன அஞ்சலிக்கு பிறகு தொடங்கியது இந்தியா-பாக்., ஆட்டம்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் விளையாட்டு மைதானத்தில் மோதி வருகின்றன.

பட மூலாதாரம், VIDIT MEHRA/BBC
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, சனிக்கிழமை இரவு லண்டனில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவான ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.
அரங்கு முழுவதும் இந்தியா-பாகிஸ்தான் ரசிகர்கள் குழுமியுள்ளனர் என்றாலும், மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டிக்கான பல இருக்கைகள் இன்னும் காலியாகவுள்ளதை காண முடிகிறது என்று அங்கிருக்கும் பிபிசி தமிழோசையின் செய்தியாளர் கூறுகிறார்.
லண்டனில் சனிக்கிழமை இரவு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும், பாதுகாப்பில் பெரிய கெடுபிடிகள் காணப்படவில்லை.
இது தொடர்பான செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













