You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாயிகள் பிரச்சனை: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திமுக அழைப்பு
தமிழக விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வறட்சியின் காரணமாக விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தில்லியில் விவசாயிகள் போராடி வருவதை சுட்டிக்காட்டியிருக்கும் திமுக, இந்தப் பிரச்சனையை மத்திய - மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லையென குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் மாநிலம் முழுவதும் இந்தப் பிரச்சனைக்காக விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் போராடி வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக விவாதித்து, மத்திய - மாநில அரசுகளிடம் கோரிக்கைகளை எடுத்துச்செல்ல அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி கூட்டவுள்ளதாக மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருப்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்பாக காவிரி பிரச்சனைக்காக திமுக இப்படியான ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியபோது, மக்கள் நலக் கூட்டணியில் இருந்த கட்சிகள், பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அதனைப் புறக்கணித்தன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்