கும்பமேளா: சாதுக்களின் தங்குமிடம், திரிவேணி சங்கமம் எப்படி இருக்கிறது? புகைப்படத் தொகுப்பு

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் & டேனியல் பி
    • பதவி, பிபிசி தமிழ்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13ஆம் தேதி துவங்கிய கும்பமேளா, பிப்ரவரி 26ஆம் தேதி நிறைவுக்கு வருகிறது.

பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நிகழ்ந்துவரும் இந்தக் கும்பமேளாவில் இதுவரை 62 கோடி பேர் நீராடியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானவர்கள் இரவும் பகலும் இந்த திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகிறார்கள். முக்கிய தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் இந்த எண்ணிக்கை கோடிகளைத் தொடுகிறது.

உச்சகட்டமாக வசந்த பஞ்சமி தினத்தன்று மொத்தம் 2.33 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்திருக்கிறது.

இந்த கும்பமேளா நடக்கும் பகுதி, வெறும் நதிகளின் சங்கமமாக மட்டும் இருப்பதில்லை. மாறாக, பல்வேறு விதமான பக்தர்கள், வியாபாரிகள், துறவிகள், நம்பிக்கையாளர்களின் சங்கமமாகவும் இருக்கிறது.

கச்ச த்வார் என்ற கீழ்க்காணும் இந்தப் பகுதிதான், சங்கம் பகுதிக்குள் நுழைவதற்கான முக்கிய நுழைவாயிலாக இருக்கிறது.

பிரயாக்ராஜில் கும்பமேளா நடக்கும் பகுதிக்குள் நுழைவதற்கு முன்பாக உள்ள பாலத்தில் கும்பமேளாவின் பின்னணிக் கதையை விளக்கும் படம் வரையப்பட்டிருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)