ஜெய் ஷா: கிரிக்கெட் உலகின் சக்தி வாய்ந்த மனிதராக உருவெடுத்தது எப்படி?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அதாவது ஐசிசி-யின் புதிய தலைவராக ஜெய் ஷா பதவியேற்க உள்ளார். 35 வயதிலேயே இந்தப் பதவியை எட்டிய இளம் கிரிக்கெட் நிர்வாகி இவர்தான்.
இதில் மற்றுமோர் சுவாரஸ்யமான விஷயம் உண்டு. 57 வயதுக்கு உட்பட்ட ஒருவர் ஐசிசி-யின் தலைமைப் பதவிக்கு வருவது இதுவே முதல்முறை.
ஐசிசி-யின் முதல் தலைவர் கொலின் கோட்ரே 1989இல் பதவிக்கு வந்தபோது அவரது வயது 57. அவருக்குப் பிறகு 11 பேர் ஐசிசி தலைவர் பொறுப்புக்கு வந்துள்ளார்கள்.
மேலும் விவரங்கள் காணொளியில்.

பட மூலாதாரம், Gujarat Cricket Association
ஐசிசி தலைவர் என்ற நிலையை அடையும் ஐந்தாவது இந்தியர் ஜெய் ஷா. இவருக்கு முன், ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன், ஷஷாங்க் மனோகர் ஆகியோர் ஐசிசி சேர்மனாக இருந்துள்ளனர்.
ஜெய் ஷா இந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் தனது புதிய பொறுப்பில் பதவியேற்கிறார்.
ஐசிசி தலைவராக ஜெய் ஷா அறிவிக்கப்பட்டதை அடுத்து சமூக ஊடகங்களில் பல மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன.
அவற்றில், கிரிக்கெட் நிர்வாகத்தில் அவர் இந்த உயரத்தை எட்டுவதில், அவரது தந்தையும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு பங்கு இருப்பதாக இணைத்துப் பேசப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



