காஷ்மிர் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் உறவு பற்றி என்ன கூறினார் பிலாவல் புட்டோ?

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது” என்று கூறினார்.
பிலாவல் புட்டோ, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்திற்குச் சற்று முன்பு பிபிசிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் "காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" எனக் கூறினார்.
பிலாவல் இந்தியா வருவதற்கான முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் முந்தைய கூட்டங்களில் பாகிஸ்தான் அமைச்சர்கள் காணொளி மூலம் பங்கேற்பதுதான் வழக்கமாக இருந்தது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார். அவருடைய ஒவ்வோர் அடியும் ஒவ்வொரு வாக்கியமும் ஒவ்வொரு சைகையும் ஊடகங்களின் பார்வையிலிருந்து தப்பவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



