You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“என் இதயம் என்னிடத்தில் இல்லை” - காஸாவில் சிக்கிக்கொண்ட பிள்ளைகளை காண முடியாமல் தவிக்கும் தாய்
இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே போர் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் காஸாவில் தன் 8 வயது மகன் மற்றும் பதின்பருவ வயதுடைய இரு மகள்கள் மற்றும் கணவரை விட்டுவிட்டு பிஹெச்.டி படிப்புக்காக பிரிட்டன் சென்றார் அமானி.
காஸாவில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பும் வான்வழி தாக்குதலால் சேதமடைந்தபோது பயத்தில் அவருடைய 8 வயது மகன் அலறும் காணொளி வைரலானது.
இந்த சூழலில் தன் பிள்ளைகள் உடன் இல்லாததை நினைத்து வருந்தும் அமானியை பிபிசி உலக சேவையின் மக்கள்தொகை செய்தியாளர் ஸ்டெஃபானி ஹெகார்ட்டி எடின்பெர்க்கில் சந்தித்து பேசிய காணொளி இது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)