தமிழர் நாகரிகத்தை உலகிற்குச் சொல்லும் கீழடி அருங்காட்சியம் (காணொளி)
தமிழர் நாகரிகத்தை உலகிற்குச் சொல்லும் கீழடி அருங்காட்சியம் (காணொளி)

சிவகங்கை மாவட்டம் கீழடியில், பாரம்பரிய செட்டிநாடு கட்டட வடிவமைப்பில் கீழடி அருங்காட்சியம் உருவாகியுள்ளது.
தமிழர் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் இந்த அருங்காட்சியம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழக தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில், 2018ஆம் ஆண்டு முதல் ஐந்து கட்டங்களாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அகழாய்வு மூலம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் இந்த அருங்காட்சியத்தில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியத்தை அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



