காணொளி: 'சிலிண்டர் இல்லையென்றால் வேலை இருக்காது'
காணொளி: 'சிலிண்டர் இல்லையென்றால் வேலை இருக்காது'
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகச் சங்கிலி உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் முன் பதிவு செய்யும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அதே போல வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உணவகங்கள், விடுதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் இதன் தாக்கத்தை உணர ஆரம்பித்துவிட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



