காணொளி: 'ஆயுர்வேதம் முதல் லேசர் வரை...' - யானை மருத்துவமனையில் சிகிச்சை எவ்வாறு தரப்படும்?

காணொளிக் குறிப்பு, "ஆயுர்வேதம் முதல் லேசர் வரை"... யானை மருத்துவமனையில் எப்படி சிகிச்சை அளிக்கப்படும்?
காணொளி: 'ஆயுர்வேதம் முதல் லேசர் வரை...' - யானை மருத்துவமனையில் சிகிச்சை எவ்வாறு தரப்படும்?

இந்தியாவில் யானைகளுக்காக தொடங்கப்பட்ட முதல் மருத்துவமனை உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இங்கு பாணி என்கிற 2 வயது பெண் யானைக் குட்டி சிகிச்சை பெற்று வருகிறது.

2024-இல் ரயில் மோதியதில் பாணியின் தாய் யானை கொல்லப்பட்டது. குட்டியானை பாணி இதில் தப்பிவிட்டது. அதன் உடல் செயலிழந்தது, காயமடைந்த அந்த குட்டியானை, மனரீதியாகவும் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் இரண்டு வருட சிகிச்சை மற்றும் கண்காணிப்பு குட்டியானை பாணியின் வாழ்க்கை மற்றும் குறும்புத் தனத்தை மீட்க உதவியது.

இந்த மருத்துவமனை எவ்வாறு செயல்படுகிறது, பாணியின் தற்போதைய நிலை என்ன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு