இந்தியாவில் கிரிக்கெட்டில் பெண்களின் பங்கேற்பு 2020-ஆம் ஆண்டிலிருந்து இரு மடங்காக அதிகரிப்பு - பிபிசி ஆய்வு

காணொளிக் குறிப்பு, இந்தியாவில் கிரிக்கெட்டில் பெண்களின் பங்கேற்பு 2020-ஆம் ஆண்டிலிருந்து இரு மடங்காக அதிகரிப்பு - பிபிசி ஆய்வு
இந்தியாவில் கிரிக்கெட்டில் பெண்களின் பங்கேற்பு 2020-ஆம் ஆண்டிலிருந்து இரு மடங்காக அதிகரிப்பு - பிபிசி ஆய்வு

14 இந்திய மாநிலங்களில் நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி, 2020 முதல் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியப் பெண்களின் பங்கேற்பு இரட்டிப்பாகியுள்ளது. இப்போது பத்து பெண்களில் ஒருவர் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள்.

பிபிசி மற்றும் கலெக்டிவ் நியூஸ்ரூம் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வு, கடந்த ஆறு மாதங்களில் இரண்டு பேரில் ஒருவர் (51%) பெண்களுக்கான விளையாட்டு செய்திகளைப் பின்தொடர்வதாகவும் சுட்டிக்காட்டுகிறது. ஆடவர் விளையாட்டு செய்திகளைப் பின்தொடர்பவர்களின் விகிதத்துடன் (63%) ஒப்பிடுகையில் இது குறைவான விகிதம் அல்ல.

பெண்களுக்கான விளையாட்டுகளில் பங்கேற்பு மற்றும் பார்வையாளர் எண்ணிக்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதில் இளம் பெண்கள் (15-24 வயதுடையவர்கள்) முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

நான்கு இளம் பெண்களில் ஒருவர் (26%), விளையாட்டை ஒரு தொழில் வாய்ப்பாகக் கருதுவதாகக் கூறுகின்றனர், இந்த விகிதம் 2020-இல் 16% ஆக இருந்தது.

2020-இல், பெண்களை விட ஐந்து மடங்கு அதிகமான ஆண்கள் கிரிக்கெட் விளையாடினர். 2026-இல், இது மூன்று மடங்கு என்ற அளவில் குறைந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு