இந்திய சந்தையில் கால் பதித்த டெஸ்லா கார்: விலை அதிகமாக இருப்பது ஏன்?

காணொளிக் குறிப்பு,
இந்திய சந்தையில் கால் பதித்த டெஸ்லா கார்: விலை அதிகமாக இருப்பது ஏன்?

ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் செவ்வாய்க்கிழமையன்று இந்தியாவில் தனது காரை அறிமுகப்படுத்தியது.

டெஸ்லா தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்துள்ளது. விரைவில் தலைநகர் டெல்லியிலும் ஒரு ஷோரூம் திறக்கப்படும் என்று டெஸ்லாவின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் இசபெல் ஃபேன் தெரிவித்ததாக சிபிஎன்சி செய்தி கூறுகிறது.

மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் சிறிது காலமாக விற்பனையில் சரிவை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் அதிகப்படியான இறக்குமதி வரி விதிக்கப்படுவதை ஈலோன் மஸ்க் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்தச் சூழலில், இந்திய சந்தையில் டெஸ்லா நுழைந்துள்ளதை உலக ஆட்டோமொபைல் துறை ஆர்வத்துடன் கவனித்து வருகிறது. டெஸ்லா இந்தியாவில் கால் பதித்திருப்பது தொடர்பான முக்கிய கேள்விகளுக்கான எளிய பதில்களைக் காணலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு