அகந்தை பிடித்த ஆண்கள் தான் மிகப்பெரிய காலநிலை பிரச்னை - இந்த நடிகை இப்படிக் கூறுவது ஏன்? - காணொளி

காணொளிக் குறிப்பு, அகந்தை பிடித்த ஆண்கள்தான் காலநிலை பிரச்னைக்கு காரணம் - இவர் இப்படிக் கூறுவது ஏன்? - காணொளி
அகந்தை பிடித்த ஆண்கள் தான் மிகப்பெரிய காலநிலை பிரச்னை - இந்த நடிகை இப்படிக் கூறுவது ஏன்? - காணொளி

நீங்கள் ஒரு பாலிவுட் பிரபலமாக இருந்தால், செல்லுமிடமெல்லாம் கவனத்தை ஈர்த்து விடுவீர்கள்.

சில நேரங்களில், இந்த கவன ஈர்ர்ப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் தியா மிர்சா.

உதாரணமாக, அவர் மிகவும் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கும் காலநிலை மாற்றம் குறித்த பிரச்சாரம் போன்ற சமயங்களில் அவ்வாறு செய்கிறார்.

ஆனால், சில நேரங்களில் இது சிக்கலாகி விடலாம்.

பிபிசி 100 பெண்களுக்கான நேர்காணலுக்கு மத்தியில், காலநிலை மாற்றம் குறித்து அவர் உரையாடிக்கொண்டிருந்து பொது, ஹோட்டல் அறையின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

நேர்காணலுக்கு யார் அறை எடுத்துள்ளது என்று தெரிந்து கொண்ட பணியாளர்கள், மிர்சாவின் படங்களை கொலேஜ் செய்து அவருக்கு பரிசளிப்பதற்காக வந்திருந்தனர்.

அதைப் பணிவுடன் ஏற்றுக்கொண்ட மிர்சா, அவர்கள் சென்ற உடனே காலநிலை மாற்றம் குறித்த தனது உரையை மீண்டும் தொடர்ந்தார்.

அப்போது சுற்றுசூழலுக்கு அச்சுறுத்தும் மிகப்பெரிய விஷயம் என்று அவர் நம்புவதைப் பற்றிப் பேசினார்.

“காலநிலை சார்ந்த மிகப்பெரும் பிரச்னை, மாற்றத்தை மறுக்கும், அகங்காரம் பிடித்த ஆண்களின் கூட்டம்தான்,” என்று கூறுகிறார். “இத்தகைய ஆண்கள்தான் பெரும் நிறுவனங்களுக்குத் தலைமை தாங்குகின்றனர்.”

“அவர்களின் செயல்கள் நமது பூமியையும் மக்களையும் அழித்து வருவது அவர்களுக்கே தெரியும். அதனால் அவர்கள் மாறாமல் இருப்பதற்கு எந்த காரணமும் சொல்ல முடியாது,” என்கிறார்.

தியா மிர்சா

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)