வயநாடு நிலச்சரிவு: சூரல்மலையில் பாதிப்பை காட்டும் டிரோன் காட்சி

காணொளிக் குறிப்பு, வயநாடு நிலச்சரிவு: சூரல்மலையில் பாதிப்பை காட்டும் டிரோன் காட்சி
வயநாடு நிலச்சரிவு: சூரல்மலையில் பாதிப்பை காட்டும் டிரோன் காட்சி

கேரள மாநிலம் வயநாட்டில் தொடர் கனமழை காரணமாக மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட இடங்களில் கடுமையான நிலச்சரி ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள வீடுகள், கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்து போயின.

ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தோண்டத்தோண்ட உடல்கள் அடுத்தடுத்து கிடைத்து வருவதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட பாதிப்பை விளக்கும் ட்ரோன் காட்சிகள் இவை. பெரும்பாலான பகுதிகள் மண்ணில் புதைந்து, நீரால் சூழப்பட்டுள்ளன.

காணொளியில் முழு விவரத்தை காணலாம்...

கேரளா, நிலச்சரிவு

பட மூலாதாரம், ANI

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)