அண்ணாமலைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழிசை - தமிழ்நாடு பாஜகவில் என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வென்றது குறித்து பேசப்பட்டதை விட, பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது தான் பெரும்பாலும் விவாதிக்கப்பட்டது.
பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்திருந்தால் சில இடங்களில் கண்டிப்பாக வென்றிருக்கலாம் என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், தனியாக போட்டியிட்டது தங்களுக்கு சாதகமாக தான் அமைந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். குறிப்பாக, “தமிழ்நாட்டில் பாஜகவுக்கான வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதே சமயம், முன்னாள் ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சௌந்ரராஜன் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைந்திருந்தால் 25 முதல் 35 இடங்கள் கிடைத்திருக்கும்” எனக் கூறியிருந்தார். பாஜகவைச் சேர்ந்த கல்யாண்ராமனும், தோல்விக்கு அண்ணாமலையின் முடிவுகள் தான் காரணம் என தனது எக்ஸ் தள பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
தமிழக பாஜகவில் நிலவும் இந்த முரண்பாடுகள் எதை உணர்த்துகின்றன? தேர்தல் முடிவுகள் காரணமாக தமிழக பாஜகவில் மாற்றங்கள் வருமா?
முழு விவரம் காணொளியில்...

பட மூலாதாரம், @ANNAMALAI_K/X
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



