பிரம்மபுத்திராவின் குறுக்கே சீனா அணை கட்டினால் இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு?

காணொளிக் குறிப்பு,
பிரம்மபுத்திராவின் குறுக்கே சீனா அணை கட்டினால் இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு?

உலகின் மிகப்பெரிய நீர்மின் அணையை கட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இது திபெத்தின் பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்வது குறித்தக் கவலைகளை அதிகரித்துள்ளது.

அதேவேளையில் இந்த அணை, இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாயும் ஆற்றின் நீரோட்டத்தில் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன.

யார்லுங் சாங்போ ஆற்றில் (இந்தியாவின் இந்த நதியின் பெயர் பிரம்மபுத்திரா) கீழ் பகுதியில் இந்த அணை அமைக்கப்பட இருக்கிறது. தற்போது உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையமான, 'த்ரீ கார்ஜஸ்' அணையைவிட இந்த அணை மூன்று மடங்கு அதிக ஆற்றலை உருவாக்கக்கூடும்.

"இந்த அணைத்திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் செழுமை மேம்படும். சீனாவின் காலநிலை இலக்குகளை அடைய இது வழிவகுக்கும்," என்று சீன அரசு ஊடகம் இந்தத் திட்டம் குறித்து விவரித்துள்ளது.

ஆனால் மனித உரிமை குழுக்கள் மற்றும் நிபுணர்கள், இந்தத் திட்டத்தின் விளைவுகள் குறித்துக் கவலைகளை எழுப்பியுள்ளனர்.

இந்த திட்டத்தால் வரும் விளைவுகள் என்ன?

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)