காணொளி: 'நெல் மூட்டைகள் சேதம்' - இபிஎஸ் விமர்சனத்திற்கு வேளாண் அமைச்சர் பதில்
காணொளி: 'நெல் மூட்டைகள் சேதம்' - இபிஎஸ் விமர்சனத்திற்கு வேளாண் அமைச்சர் பதில்
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து சேதமடைந்திருப்பதாக, அதிமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
‘விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளியாக உள்ளது,’ என்றார்.
இதற்கு பதிலளித்த வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “நெல் லேசாக முளைத்ததற்கே இப்படி பேசுகிறார்கள். அதிமுக ஆட்சிக்காலத்தில் நடவு செய்யும் அளவுக்கு நெல் முளைத்திருக்கும். நெல் மூட்டைகள் திறந்தவெளி பகுதியில் அல்லாமல், பாதுகாப்பான இடங்களில் வைக்கப்படுகின்றன” என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



