You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: கொழும்புவில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் நீர்த்தாரை பிரயோகம்
கொழும்பு - நகர மண்டபம் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் நீர்தாரை பிரயோகம் நடத்தினர்.
பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்ற பிரச்னைகள் தொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு வருகைத் தந்தனர்.
வீதியின் நடந்து வந்த மாணவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு செல்ல அனுமதிக்காது தடைவிதித்தனர்.
தமது பிரச்னைகளை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தும் ஒரே இடம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எனவும், அங்கு செல்ல தமக்கு ஏன் அனுமதிக்க வழங்கவில்லை எனவும் மாணவர்கள் போலீஸாரிடம் கேள்வி எழுப்பினர்.
எனினும், எந்தவித பதிலையும் வழங்காது, மாணவர்களை செல்லது தடுத்து நிறுத்தினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்