எத்தியோப்பியா எரிமலை வெடிப்பால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? - காணொளி
எத்தியோப்பியா எரிமலை வெடிப்பால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? - காணொளி
எத்தியோப்பியாவில் ஹைலி குப்பி எரிமலை வெடித்ததன் காரணமாக, வானத்தில் பல கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் மேகங்கள் காணப்படுகின்றன.
இதன் தாக்கம் இந்தியா வரை உணரப்படுகிறது. இந்தச் சாம்பல் மேகங்கள் செங்கடலைக் கடந்து மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா நோக்கி நகர்ந்து வருகின்றன.
இந்த மேகங்கள் மிக அதிக உயரத்தில் இருப்பதால், தரையில் அதன் தாக்கம் அதிகமாக இருக்காது. ஆனால், இந்த உயரத்தில்தான் பெரும்பாலான பயணிகள் விமானங்கள் பறக்கின்றன.
இதன் காரணமாக, இந்தியாவில் பல சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் தாமதமாக இயங்குகின்றன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானங்களின் பாதையும் மாற்றப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



