5 குட்டிகளை ஈன்ற இந்தியாவில் பிறந்த சிவிங்கிப் புலி
5 குட்டிகளை ஈன்ற இந்தியாவில் பிறந்த சிவிங்கிப் புலி
இந்தியாவின் சிவிங்கிப்புலி பாதுகாக்கும் முயற்சியின் முக்கிய மைல்கல் தருனமாக, இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிப்புலியான முகி, ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது.
இந்தியாவில் சிவிங்கிப்புலி அழிந்துவிட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டு சுமார் 70 ஆண்டுகள் கழித்து, இந்திய அரசின் 'சிவிங்கிப்புலி மறு அறிமுக திட்டத்தின்' ஒரு பகுதியாக முகி இருந்தது.
நமீபிய சிவிங்கிப்புலிக்கு பிறந்த முகி, இந்திய வாழ்விடத்தை ஏற்க தீவிரமான சூழ்நிலைகளை எதிர்கொண்டது. பின் அது இனப்பெருக்கமும் செய்தது. சமீபத்திய வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவிலேயே பிறந்த சிவிங்கிப்புலி ஈன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



