You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஈஸ்டர் தாக்குதல் போல இலங்கையில் இன்னொரு தாக்குதலா? சதி பற்றி ராணுவம் கூறுவதென்ன?
ஈஸ்டர் தாக்குதலை போன்றதொரு தாக்குதலை நடத்த ராணுவத்துடன் இணைந்து சிலர் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தப்பத்து வெளியிடுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான போலிச் செய்திகளால் இலங்கை ராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், போலிச் செய்திகளால் நாட்டு மக்களின் மத்தியில் பெரும் அச்சம் தோன்றியுள்ளதாகவும் ராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான போலி தகவல்களை வெளியிட்ட நபர்கள் தொடர்பாக இலங்கை ராணுவம் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இணையத்தளத்தின் ஊடாகவும், இலத்திரணியல் மற்றும் அச்சு ஊடகங்களின் ஊடாகவும் இலங்கை ராணுவம் தொடர்பான போலிச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தப்பத்து குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்