You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: பேருவளை, ஆளுத்கம மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு முடிவு
இலங்கையில் முந்தைய மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் ஏற்பட்ட மோதல்களின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தோருக்கு இழப்பீடும் நிவாரணமும் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
2014-ஆம் ஆண்டு ஜுன் 15, 16 ஆகிய தேதிகளில் பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல்களின் போது முன்று முஸ்லிம்கள் மரணமடைந்ததுடன் மேலும் 12 பேர் காயமடைந்தனர். .
இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடும், காயம் அடைந்தோருக்கு நிவாரணமும் வழங்க புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமரப்பித்த இந்த யோசனையை அமைச்சரவையை ஏற்றுக் கொண்டுள்ளது.
அதன்படி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தலா இருபது லட்சம் ரூபாயும், காயமடைந்த நபருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இது குறித்து மனித உரிமை செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான நாமல் ராஜபக்ஷ கூறுகையில், பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.
ஆனால் இழப்பீடு வழங்குவதன் மூலம் மட்டும் பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க முடியாதென்று கூறிய வழக்கறிஞர் ராஜபக்ஷ, இந்தச் சம்பவத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய நபர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனைகளை வழங்குவதன் முலம் மாத்திரமே பாதிக்கப்பட்டோருக்கு முழுமையாக நியாயத்தை வழங்க முடியுமென்று தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்ப்பாக கடும்போக்குவாத சிங்கள அமைப்பான பொது பல சேனா மீது குற்றம்சாட்டிருந்தது.
இதையும் படிக்கலாம்:
- அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- பால்காரருக்கு உதவு முடியுமா? புதிரை கண்டுபிடியுங்கள்!
- முத்தலாக்கை திருக்குர்ஆன் ஆதரிக்கிறதா?
- இலங்கை: இரு காரணங்களுக்காக கருக்கலைப்புக்கு அனுமதி?
- வட கொரியாவுக்கு உதவிய ரஷ்ய, சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை
- விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை
- சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- பிபிசி தமிழ் முகநூல்
- பிபிசி தமிழ் ட்விட்டர்
- பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- பிபிசி தமிழ் யு டியூப்