You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குப்பைகள் அதிகரிப்பால் டெங்கு உயிரிழப்புகள் அதிகம்- இலங்கை சுகாதார அமைச்சர்
இலங்கை தலைநகர் கொழும்பில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அதிகரித்து வரும் குப்பைகள்தான் காரணம் என்று இலங்கை சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனரத்னே தெரிவித்தார்.
இந்த பிரச்னையை விரைவாக சமாளிக்கத் தவறினால் சூழ்நிலை மேலும் மோசமாகும் என்றும் அவர் எச்சரித்தார்.
கடந்த ஏப்ரலில் கொழும்பில் குப்பை மேடு சரிந்ததில் 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததை தொடர்ந்து, நகரில் குப்பைகளை அள்ளும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது.
தெருக்களில் தேங்கும் அழுகிப்போன குப்பைகள் அதிகரித்து வருவதால் கொசுக்களின் இனப்பெருக்கும் அதிகரித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்