You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அஷ்வின் வீழ்த்திய 450 விக்கெட்டுகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் புது சாதனை
இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் இன்றைய தினம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
சர்வதேச அளவில் அஷ்வின் தான் குறைந்த போட்டிகளில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் ஆவர். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் இருக்கிறார்.
இன்றைய தினம் நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட்டுகளை இழக்கும் வரை அஷ்வினுக்கு விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை.
முதல் பத்து ஓவர்களில் விக்கெட் எதையும் வீழ்த்தாத நிலையில் ஆட்டத்தின் 54வது ஓவரை வீசினார் அஷ்வின்.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே அலெக்ஸ் கெரீ விக்கெட்டை கைப்பற்றினார். ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்ற அவர் போல்டானார். இதன்மூலம் அஷ்வினின் 450-வது டெஸ்ட் விக்கெட் ஆகிவிட்டார் அலெக்ஸ் கெரீ.
இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அஷ்வின் மூன்று விக்கெட்டுகளையும், ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தனது 89வது டெஸ்ட் போட்டியில் 450 விக்கெட்டுகளை அள்ளிவிட்டார் அஷ்வின். இந்த மைல்கல்லை முத்தையா முரளிதரன் 80 டெஸ்ட் போட்டிகளில் எட்டிவிட்டார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 450 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை தொட்ட ஒன்பதாவது வீரர் அஷ்வின் ஆவார்.
ஏற்கெனவே கபில்தேவை முந்திவிட்ட அஷ்வின், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரார்கள் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அனில் கும்ப்ளே 619 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்