விராட் கோலி - 'டெஸ்ட் அணியை தேர்வு செய்ய 1.5 மணி நேரத்துக்கு முன்புதான் சொன்னார்கள்'

பட மூலாதாரம், Getty Images
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும் இந்திய டெஸ்ட் அணியை தேர்வு செய்ய 1.5 மணி நேரத்துக்கு முன்புதான் தேர்வுக் குழுவினர் தம்மிடம் சொன்னார்கள் என்று விராட் கோலி கூறியுள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனாக இருந்த விராட் கோலி டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து மட்டும் விலகுவதாக டி20 உலகக்போப்பை தொடர் தொடங்கும் முன்னர் அறிவித்தார்.
ஆனால், விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக இருந்தால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆகிய இரண்டு 'ஒயிட் பால்' ஃபார்மட்டில் இருந்தும் விலக வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூறியது.
அதன்பின், ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பொறுப்புக்கு ரோஹித் சர்மாவை நியமித்தது பிசிசிஐ.
இன்றைய செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி கூறிய முக்கிய கருத்துகள் இங்கே.
- இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்கிற நோக்கத்திலிருந்து என்னை எதுவும் திசைதிருப்ப முடியாது. என் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயத்தை சிறப்பாகச் செய்யவும், தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன்.
- டெஸ்ட் அணியை முடிவு செய்வதற்கான கூட்டத்திற்கு கடைசி நேரத்தில்தான் அழைக்கப்பட்டேன். கூட்டத்தின் முடிவில் ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து என்னை விடுவிப்பதாகக் தேர்வுக்குழு கூறியது.
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) நான் எந்த ஓய்வும் கேட்கவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட தயாராக உள்ளேன்.

பட மூலாதாரம், Getty Images
- எனக்கும் ரோஹித்துக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை. இதை 2 ஆண்டுகளாக கூறி, சோர்ந்துவிட்டேன்.
- தலைமைப் பொறுப்பிலிருந்து வெளியேறிய பின் என்னால் சிறப்பாக செயல்பட முடியுமா, இல்லையா என்பதைக் குறித்து என்னால் எந்தவித கருத்தும் கூற முடியாது என்று கருதுகிறேன்.
- இதை யாராலும் கணிக்க முடியாது என்றே கருதுகிறேன். இந்திய அணியில் கேப்டனாக செயல்பட்டதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். அணிக்கு என்னால் என்ன சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறேன்.
- அணிக்காக விளையாட வேண்டும் என்கிற நோக்கம் எப்போதும் குறையாது. எப்போதும் போல அணிக்காக விளையாட தயாராக இருப்பேன்.
- என் பொறுப்புக்கு நான் உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தேன், என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை செய்தேன் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். அது தான் ஒருநாள் மற்றும் டி20 தலைமைப் பொறுப்பு குறித்து என் மதிப்பீடு.
- ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியை சரியான வழியில் அழைத்துச் செல்வது ஒரு மூத்த வீரராக என் பொறுப்புகளில் ஒன்று, இதை நான் இந்திய அணியில் தலைவர் பதவிக்கு வருவதற்கு முன்பும் செய்திருக்கிறேன். அந்த மனநிலை இன்றுவரை மாறவில்லை, அது எப்போதும் மாறாது.
- ரோஹித் ஷர்மா ஒரு திறமையான தலைவர் என்பதை அவர் இந்திய அணியைத் தலைமை தாங்கி வழிநடத்திய போதும், ஐபிஎல் போட்டிகளிலும் பார்க்க முடியும்.
- ராகுல் டிராவிட் மிகவும் சமநிலை கொண்ட பயிற்சியாளர். மனிதர்களை பிரமாதமாக நிர்வகிக்கக் கூடியவர். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருவருக்கும் என் முழுமையான ஆதரவு உண்டு என கூறினார் விராட் கோலி.
பிற செய்திகள்
- பார்க்கர்: சூரியனுக்கு மிகவும் அருகில் சென்று நாசா விண்கலம் சாதனை
- நேரு - சர்தார் படேல் இடையே பகைமை இருந்ததா?
- இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைப்பது சீனாவா? மேற்குலக நாடுகளா?
- அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
- இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் - பெரிய முதலீடின்றி சுயதொழில் தொடங்குவது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








