You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#BBCISWOTY: உங்களுக்கு பிடித்த விளையாட்டு வீராங்கனைக்கு வாக்களியுங்கள்
2019ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கும் விழாவை இந்தியாவில் முதல்முறையாக நடத்துகிறது பிபிசி.
பொது மக்கள் வாக்களிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 வீராங்கனைகளின் பெயர்களையும் பிபிசி அறிவித்துள்ளது.
தூத்தி சந்த் (தடகளம்), மானசி ஜோஷி (பாரா-பேட்மிண்டன்), மேரி கோம் (குத்துச்சண்டை), பிவி சிந்து (பேட்மிண்டன்) மற்றும் வினேஷ் போகாட் (மல்யுத்தம்) ஆகியோரே அந்த 5 வீராங்கனைகள்.
2020 பிப்ரவரி 17, 23:30 மணி (இந்திய நேரப்படி) வரை வாக்களிக்க முடியும். இதில் வெற்றி பெறும் வீராங்கனையின் பெயர் மார்ச் 8 -ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படும்.
இதற்கான விதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்பு (Privacy notice) ஆகியவை வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன் முடிவுகள் பிபிசி இந்திய மொழி சேவைகளின் வலைதளங்களில் அறிவிக்கப்படும். மேலும் பிபிசி ஸ்போர்ட்ஸ் வலைதளத்திலும் உங்களால் முடிவுகளை தெரிந்து கொள்ளமுடியும்.
பொதுமக்களின் அதிக வாக்குகள் பெறும் வீராங்கனையே பிபிசியின் இந்தாண்டுக்கான சிறந்த விளையாட்டு வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
நாட்டின் தலைசிறந்த விளையாட்டு செய்தியாளர்கள், நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்களால் இந்த ஐந்து வீராங்கனைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கும் குழுவினரால் அதிகமுறை பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனைகள், பொதுமக்கள் வாக்களிப்புக்காக முன்மொழியப்பட்டுள்ளனர்.
மேலும் தலைசிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு, வாழ்நாள் சாதனை விருது வழங்கியும் பிபிசி கௌரவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: