You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகக்கோப்பை கால்பந்து: 28 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதியில் இங்கிலாந்து
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் சுவீடன் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
சற்று முன்பு நடந்த போட்டியில் இரண்டுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து சுவீடன் அணியை வீழ்த்தியது. இதனால், 1990க்கு பிறகு முதல் முறையாக இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இங்கிலாந்துக்காக ஹேரி மகுவெர் மற்றும் டெலி ஆலி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
மாஸ்கோவில் நடக்கவுள்ள அடுத்த காலிறுதியில் ரஷ்யா மற்றும் குரேசிய அணிகள் மோதுகின்றன. அதில் வெல்லும் அணியுடன் இங்கிலாந்து வரும் புதனன்று நடக்கவுள்ள அரை இறுதியில் மோதவுள்ளது.
இங்கிலாந்து கோல் கீப்பர் ஜோர்டான் பிக்போர்டு சுவீடன் அணியின் மூன்று கோல் முயற்சிகளை சிறப்பாகத் தடுத்தது சுவீடனின் தோல்விக்கு காரணமாக இருந்தது.
ஏற்கனவே நடந்த முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் வென்று அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
பிற செய்திகள்:
- ''கவலைப்படாதீர்கள்'' - தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் கடிதம்
- பதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்
- தென்னகத்துக்கு வரும் வடமாநிலத்தவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யார்?
- தமிழ்நாட்டில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊடக சுதந்திரம்
- சீனா - அமெரிக்கா பொருளாதார சண்டை எப்படி நம்மை பாதிக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்