காற்று மாசு என சொல்லி கிரிக்கெட் போட்டியை இலங்கை வீரர்கள் நிறுத்தியது சரியா?

பட மூலாதாரம், SKY SPORTS
காற்று மாசு காரணமாக டெல்லியில் நடக்கும் டெஸ்ட் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இலங்கை அணி முடிவு செய்தது சரியானதே என ஒரு மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.
இந்தியத் தலைநகர் டெல்லி கடந்த சில வாரங்களாகக் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின் கீழ் பார்த்தால், ஞாயிற்றுக்கிழமையன்று காற்று மாசு மிகவும் மோசமாக இருந்துள்ளது. அப்படியென்றால் கடுமையான உழைப்பைத் தவிர்க்க வேண்டும்.
''இந்தச் சுற்றுச்சூழலில், வெளிப்புறத்தில் யாராலும் எந்த விளையாட்டையும் விளையாட முடியாது'' என மேக்ஸ் பல்நோக்கு மருத்துவமனையின் தலைமை நுரையீயல்நோய் சிகிச்சை மருத்துவர் பிரசாந்த் சக்சேனா கூறுகிறார்.
களத்தில் இருந்த இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடினர். ஒரு கட்டத்தில் 10 இலங்கை வீரர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர்.
போட்டியை நிறுத்தியதற்காக இலங்கை அணியைப் பலரும் சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்தனர். இலங்கை அணியின் இந்த முடிவு இந்தியாவில் பலத்த கோபத்தை ஏற்படுத்தியது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
காற்று மாசுவால், ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை.
இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்திவரும் இந்தியாவின் கை மேலும் ஓங்குவதைத் தடுக்கவே இலங்கை அணியினர் போட்டியை நிறுத்தியதாகப் பலர் கூறுகின்றனர்.
'' இந்தக் காற்று மாசில் எந்த விதமாக உடல் உழைப்பும், சுவாசிப்பதில் சிரமங்களை ஏற்படுத்தலாம். அத்துடன் கண்களில் நீர் வழியலாம், இருமல் ஏற்படலாம். இந்த சுழ்நிலையில் விளையாடச் சாத்தியமில்லாத கிரிக்கெட்டை விளையாடும் போது, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' என பிபிசியிடம் கூறுகிறார் மருத்துவர் பிரசாந்த் சக்சேனா.
காற்று மாசுவின் விளைவுகளை கிரிக்கெட் மைதானம் மேலும் அதிகரிக்கலாம் என்கிறார் அவர். ''கிரிக்கெட் மைதானத்தில் காற்றோட்டம் குறைவாக இருக்கும். இதனால் தூசி மற்றும் நச்சுகள் கலந்த காற்றையே ஒருவரால் சுவாசிக்க முடியும்'' என்கிறார் சக்சேனா.
காற்றில் நச்சு வாயுக்கள் உள்ள நிலையில், இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்தது பயனற்றது எனக் கூறும் அவர், காற்று மாசு குறித்து சரியான கூற்றையே இலங்கை வீரர்கள் கூறினார்கள் என ஒப்புக்கொள்கிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












