சுற்றுச்சூழல் பாதுகாப்பு: மனிதர்களின் ஃபேஷன் ஆடை மோகத்துக்கு இயற்கை கொடுக்கும் விலை

காணொளிக் குறிப்பு, மனிதர்களின் ஃபேஷன் மோகத்தால் இயற்கை கொடுக்கும் விலை என்ன?

ஆண்டுக்கு ஆண்டு என்பது போய், மாதத்துக்கு மாதம் ஃபேஷன் மாறி வருகிறது. இதனால் ஆடைகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது இயற்கைக்கு நல்லதல்ல.

ஏராளமானோர் தாங்கள் வாங்கும் ஆடைகளை ஓராண்டு கூட பயன்படுத்துவதில்லை.

இதனால் பருத்தி வேளாண்மையில் தேவைப்படும் நீர், பருத்தி வயல்களில் பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லி, ஆடை உற்பத்தியின்போது பயன்படுத்தப்படும் நீர் மற்றும் வெளியாகும் கரியமில வாயு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதிக் கழிவுகள், அக்கழிவுகளால் மாசுபடும் நீர் நிலைகள் என்று சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :