You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிட்டனில் முதல் முறையாக தோல்வியடைந்த மலேரியா சிகிச்சை: மருத்துவர்கள் கவலை
நோய் மருந்தையும் மீறிய எதிர்ப்புத் திறன்மிக்க மலேரியா நோய் வகைகள் ஆப்ரிக்க கண்டம் முழுவதிலும் வெளியாகி வருவதாக தெரிவித்து புதிய கவலைகளை பிரிட்டன் மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.
உகாண்டா, அங்கோலா மற்றும் லைபீரியா ஆகிய ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம் செய்த பின்னர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட நான்கு நபர்களுக்கு பிரிட்டனில் அளிக்கப்பட்ட ஒரு முக்கிய மலேரியா சிகிச்சை முதல் முறையாக தோல்வியடைந்துள்ளளது.
ஆரம்பத்தில் ஒரு மலேரியா எதிர்ப்பு சிகிச்சையை அவர்களின் உடல் நல்ல முறையில் ஏற்று வந்தாலும், பின்னர் ஒரு மாதம் கழித்து அவர்களுக்கு மீண்டும் மலேரியா தாக்குதல் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
மலேரியா நோயை உண்டாக்கும் ஒட்டுண்ணி மாதிரிகளை கொண்டு நடத்தப்பட்ட சோதனைகளில், மலேரியா நோய் மருந்துக்கு இவ்வகை ஒட்டுண்ணிகள் எதிர்ப்பை உருவாக்கி இருக்கக் கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்