ஸாப்போரீஷியா அணுமின் நிலைய தாக்குதலில் சிலர் உயிரிழப்பு; மேலும் சிலர் காயம்

யுக்ரேனின் ஸாப்போரீஷியா அணுமின் நிலையத்தில் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் யுக்ரேன் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நிறைவடைகிறது மார்ச் 4ஆம் தேதி நேரலை பக்கம். இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...

    வணக்கம் நேயர்களே!

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை மேலும் சில வாரங்களுக்கு தொடரலாம் என்று இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • யுக்ரேனில் ரஷ்ய படையினர் நடத்தி வரும் தாக்குதலின்போது குறைந்தது மூன்று ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.மோதல் களத்தில் இந்த தளபதிகள் முன்னணியில் படையை வழிநடத்தி வந்ததாக நம்பப்படுகிறது.
    • யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்ந்துவரும் நிலையில், இந்தியாவை சேர்ந்த ஹர்ஜோத் சிங் என்பவர் யுக்ரேனில் துப்பாக்கிசூடு தாக்குதலுக்கு உள்ளானார். இதையடுத்து, அவர் கீயவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • யுக்ரேனின் ஸாப்போரீஷியா அணுமின் நிலையத்தில் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும், சிலர் காயமடைந்துள்ளதாகவும் யுக்ரேன் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • ரஷ்யாவில் பிபிசி நியூஸ் செயல்பாடுகளை கனத்த இதயத்துடன் நாங்கள் இடைநிறுத்துகிறோம் என்று பிபிசியின் இடைக்கால இயக்குநர் ஜோனாத்தன் மன்ரோ தெரிவித்துள்ளார்.
    • டாய்சா வெலீ அல்லது டி.டபிள்யூ (DW) எனும் ஜெர்மனியின் சர்வதேச ஊடகத்தின் சேவைகளை அணுகுவதற்கு, ரஷ்யாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • ஸாப்போரீஷியா அணுமின் நிலையம் மீதான ரஷ்யாவின் தாக்குதல், “ஆறு செர்னோபில்” அணு உலைகளுக்கு சமமான அழிவுகளை ஏற்படுத்தியிருக்கும் என, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
    • இந்திய குடிமக்களை மீட்பதற்கான ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ், 14 சிவிலியன் விமானங்கள் மற்றும் 3 C-17 IAF விமானங்கள் உட்பட யுக்ரேனின் அண்டை நாடுகளில் இருந்து 17 சிறப்பு விமானங்கள் இன்று நாடு திரும்பியுள்ளன.
    • ரஷ்ய ஆயுதப்படை குறித்து “போலி” செய்திகளை பரப்புவோரை 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கும் வகையிலான சட்டம், ரஷ்ய நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள். நேற்றைய நேரலைப் பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    விளாதிமிர் புதின்

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்யா

    பட மூலாதாரம், Getty Images

  2. யுக்ரேன், ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடரலாம்

    யுக்ரேன் ரஷ்யா

    பட மூலாதாரம், Twitter/@Podolyak_M

    யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை மேலும் சில வாரங்களுக்கு தொடரலாம் என்று இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை நடைபெறலாம் என்றும் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்" என்று யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கியின் ஆலோசகர் மிகைலோ பொடோலியாக் கூறினார்.

    பெலாரூஸ் உடனான யுக்ரனிய எல்லையில் இரு தரப்பு அதிகாரிகளுக்கும் இடையிலான முதல் சுற்று பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.

    அதே சமயம், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில், மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும், மக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பான தாழ்வாரங்களை உருவாக்கவும் சில காலம் சண்டையை நிறுத்தவும் ரஷ்யா ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.

    ஆனால் இந்த முடிவை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று யுக்ரேன் கூறியிருக்கிறது.

  3. யுக்ரேன் - ரஷ்யா மோதல்: டோன்யூட்ஸ்க் பகுதியில் வாழும் மக்களின் நிலை என்ன?

    யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில் அங்குள்ள டோன்யூட்ஸ்க் பகுதி மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்தவே கடும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் நிலையை இந்த காணொளியில் பார்க்கலாம்.

    காணொளிக் குறிப்பு, ரஷ்யா சுதந்திர நாடாக அறிவித்த டொன்யூட்ஸ்க் பகுதியில் மக்களின் நிலை என்ன?
  4. யுக்ரேன் தாக்குதல்: மூன்று ரஷ்ய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர் - மேற்கு அதிகாரிகள்

    யுக்ரேனில் ரஷ்ய படையினர் நடத்தி வரும் தாக்குதலின்போது குறைந்தது மூன்று ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.மோதல் களத்தில் இந்த தளபதிகள் முன்னணியில் படையை வழிநடத்தி வந்ததாக நம்பப்படுகிறது.

    மேற்கு நாடுகளின் கூற்றுப்படி, ரஷ்யாவின் 41வது ஒருங்கிணைந்த ராணுவத்தின் தளபதி ஒரு துப்பாக்கி சுடும் வீரரால் சுடப்பட்டார். இது மட்டுமின்றி ஒரு படையணியின் கட்டளைத்தளபதி மற்றும் ஒரு பிராந்திய தளபதியும் சண்டையில் இறந்துள்ளனர்.

    ரஷ்ய தளபதிகள் முன்னோக்கி நகரும்போதே படையின் அதிக கட்டுப்பாட்டை அவர்களால் கொண்டிருக்க முடியும். ஆனால், களத்தில் இப்படி செயல்படும்போது இது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்கிறது என்று மேற்கு நாடுகளின் அதிகாரிகள் கூறினர்.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது பிபிசி -

    ரஷ்யாவில் பிபிசி நியூஸ் செயல்பாடுகளை கனத்த இதயத்துடன் நாங்கள் இடைநிறுத்துகிறோம் என்று பிபிசியின் இடைக்கால இயக்குநர் ஜோனாத்தன் மன்ரோ தெரிவித்துள்ளார்.

    சுதந்திரமான இதழியலுக்கு தடை விதிக்கும் அந்த நாட்டின் புதிய சட்டங்களை மதிப்பிடும் வரை பிபிசி சேவை இடைநிறுத்தப்படும். நீண்ட காலம் அமைதிப்படுத்த முடியாத சக ஊழியர்களுடன் எங்களின் எண்ணங்கள் உள்ளன என்று ஜோனாத்தன் மன்ரோ தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மாரடைப்பால் இன்று காலமானார்

    ஷேன் வார்னே

    பட மூலாதாரம், GETTY IMAGES

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த லெக் ஸ்பின்னர் ஆன ஷேன் வார்ன் தனது 52வது வயதில் காலமானார்.

    அவரது மரணச் செய்தியை உறுதிப்படுத்தி ஷேன் வார்னின் நிர்வாகக்குழு சுருக்கமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்தின் கோ சாமுய்யில் மாரடைப்பால் அவர் காலமானார். அங்குள்ள தனது தங்கும் விடுதியில் சுயநனவின்றி காணப்பட்ட ஷேனின் நினைவு திரும்ப மருத்துவ ஊழியர்களின் சிறந்த முயற்சிகள் எடுத்தபோதும் அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

    "இந்த நேரத்தில் ஷேனின் குடும்பம் தனி உரிமையைக் கோருகிறது. மேலும் விவரங்களை உரிய நேரத்தில் அவர்கள் வழங்குவார்கள்," என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட இரண்டாவது பேரழிழப்பு தரும் செய்தி இதுவாகும்.

    கிரிக்கெட் உலகில் சக ஜாம்பவான் ஆக விளங்கிய ராட் மார்ஷ், கடுமையான மாரடைப்பால் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலமானார்.

    'வார்ன்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களால் போற்றப்படுபவர். வார்ன், இதுவரை விளையாடிய சிறந்த பந்து வீச்சாளர்களில் முன்னோடியாக போற்றப்படுபவர்.

    அவரது நட்சத்திர சர்வதேச வாழ்க்கை 15 ஆண்டுகளாக நீடித்தது. 708 டெஸ்ட் விக்கெட்டுகளை அவர் தமது கிரிக்கெ ஆட்டங்களில் எடுத்தார்.

    1992இல் SCGயில் தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட வார்ன், சர்வதேச கிரிக்கெட்டில் எந்தவொரு அணியும் ஆதிக்கம் செலுத்தாத காலகட்டங்களில் அனைத்து பிரிவுகளிலும் ஒரு முக்கிய நபராக விளங்கினார்.

  7. “இந்திய தூதரகம் எவ்வித உதவியையும் செய்யவில்லை”: துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இந்தியர்

    ஹர்ஜோத் சிங்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, ஹர்ஜோத் சிங்

    யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்ந்துவரும் நிலையில், இந்தியாவை சேர்ந்த ஹர்ஜோத் சிங் என்பவர் யுக்ரேனில் துப்பாக்கிசூடு தாக்குதலுக்கு உள்ளானார். இதையடுத்து, அவர் கீயவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அவர் பேசும் வீடியோ ஒன்றை ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது. அதில், “இந்திய தூதரகத்திலிருந்து இதுவரை எவ்வித உதவியையும் பெறவில்லை. அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆனால், ஏதாவது ஒன்றை தாங்கள் செய்வதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், எந்த உதவியையும் இதுவரை பெறவில்லை,” என தெரிவித்தார்.

    “இச்சம்பவம் பிப். 27 அன்று நடந்தது. நாங்கள் 3 பேர் கார் ஒன்றில், சோதனைச்சாவடிக்கு சென்றபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக திரும்பி செல்லுமாறு எங்களிடம் கூறினர். திரும்பி வரும்போது, எங்கள் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால், குண்டு தாக்குதலுக்கு நான் ஆளானேன்.

    இறந்த பின்னர் நீங்கள் விமானம் அனுப்புவது முக்கியம் அல்ல. கடவுள் எனக்கு இரண்டாவது முறையாக வாழும் வாய்ப்பை வழங்கியுள்ளார். நான் அதனை வாழ விரும்புகிறேன். இங்கிருந்து என்னை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தூதரகத்தைக் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு சக்கர நாற்காலி வழங்க வேண்டும். ஆவணங்கள் தொடர்பாக உதவி செய்யுங்கள்” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. அணுமின் நிலைய தாக்குதலில் சிலர் உயிரிழப்பு; மேலும் சிலர் காயம்

    அணுமின் நிலையம்

    பட மூலாதாரம், Reuters

    யுக்ரேனின் ஸாப்போரீஷியா அணுமின் நிலையத்தில் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் யுக்ரேன் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அணுமின் நிலையம் பாதுகாப்பான முறையில் செயல்படுவது குறித்து, பணியாளர்கள் கண்காணித்து வருவதாகவும், அங்கு கதிர்வீச்சின் அளவு இயல்புநிலையில் இருப்பதாகவும், அந்த அமைச்சகம் முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின் நிலைய அலகுகளுக்குள் உள்ளே இருக்கும் அணு எரிபொருளை குளிர்விக்கும் செயல்முறை பாதிக்கப்பட்டால், பரவலான கதீர்வீச்சு சேதம் ஏற்படும்.

    “ஷெல் தாக்குதல் மற்றும் சண்டை காரணமாக அணுமின் நிலையத்திற்கு அருகே உள்ள பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோரை அங்கிருந்து வெளியேற்ற இயலவில்லை. இதனால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸாப்போரீஷியா அணுமின் நிலையத்தில் நடந்த தாக்குதல், செர்னோபில், புகுஷிமா அணு உலை விபத்துகளை விட மோசமானதாக இருக்கும் என, அதில் கூறப்பட்டுள்ளது.

    “அணுமின் நிலையத்தில் ரஷ்யா தெரிந்தே ராணுவ தாக்குதலில் ஈடுபட்டது. இது, பன்னாட்டு அணு சக்தி முகமையின் சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறும் நடவடிக்கை ஆகும்” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அங்கிருந்து ரஷ்ய படைகளை வெளியேற்ற சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  9. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் ரஷ்யாவுக்கு பெரும் தோல்வி,

    ரஷ்யாவின் படையெடுப்புக்குக் கண்டனம் தெரிவிக்கும் யுக்ரேனிய தீர்மானத்தை ஐநா மனித உரிமைகள் ஆணையம் பெருமளவில் ஆதரித்துள்ளது. மேலும், போர்க் குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க ஆணையம் ஒன்றையும் ஐநா மனித உரிமைகள் ஆணையம் அமைத்துள்ளது.

    இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ரஷ்யா முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த உறுப்பினர் நாடு எரித்ரியா மட்டும்தான்.

    விசாரணை ஆணையம் அமைப்பதுதான், ஐநா மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிடக்கூடிய உயர்மட்ட அளவிலான விசாரணையாகும். ஏற்கெனவே சிரியாவுக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 32 நாடுகளும், எதிராக 2 நாடுகளும், 13 நாடுகள் வாக்களிப்பதிலிருந்து விலகியும் இருந்தன. இந்த வாக்கெடுப்பு ரஷ்யாவுக்கு அவமானமானதாக கருதப்படுகிறது.

    சீனா, கியூபா, வெனிசுலா ஆகிய நாடுகள் வழக்கமாக ரஷ்யாவை ஆதரிக்கும். ஆனால், இம்முறை அவை வாக்களிப்பதிலிருந்து விலகி இருந்தன.

    ஆனால், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதரவுடன் யுக்ரேன் முன்வைத்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த சில நாடுகள், தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில வார்த்தைகள் ஒருதலைபட்சமாக இருப்பதாக அதிருப்தியை வெளிப்படுத்தின.

  10. யுக்ரேன் Vs ரஷ்யா: யாருக்கு பலம் அதிகம்?

    யுக்ரேன் ரஷ்யா
  11. பெரும் பதற்றம்: ரஷ்ய தாக்குதலால் தீப்பிடித்த அணு மின் நிலையம் - தற்போதைய நிலை?

    ரஷ்ய தாக்குதலால் தீப்பிடித்த அணு மின் நிலையத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை விளக்கும் காணொலி.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  12. எங்கள் மீது இன்னும் தடைகளை விதிக்காதீர்கள்: புதின் எச்சரிக்கை

    புதின்

    பட மூலாதாரம், Rossiya 24 news channel

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்ப்போருக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா மீது இன்னும் பல தடைகளை விதித்து, “நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

    ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரோசியா 24 எனும் செய்தி சேனலில் ஒளிபரப்பான அரசு கூட்டத்தில் புதின் பேசினார்.

    அதில், “எங்கள் அண்டை நாடுகளுக்கு எதிராக எங்களுக்கு எவ்வித தீய நோக்கங்களும் இல்லை” என புதின் தெரிவித்தார்.

    மேலும் “உறவுகளை மேலும் மோசமாக்கும்” வகையிலான கூடுதல் நடவடிக்கைகளை அண்டை நாடுகள் எடுப்பதற்கான “எவ்வித அவசியமும் இல்லை” என தங்கள் அரசு கருதுவதாக அவர் தெரிவித்தார்.

    “உறவுகளை எப்படி இயல்புநிலைக்குக் கொண்டு வருவது, ஒத்துழைப்பது மற்றும் உறவுகளை மேம்படுத்துவது குறித்துத்தான் அனைவரும் சிந்திக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

    ரஷ்யா மீதான அழுத்தத்தை எப்படி தொடர்வது என்பது குறித்து ஆலோசிக்க, மேற்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் கூடியுள்ள நிலையில், புதின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இதுவரை ரஷ்ய ராணுவம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும், “ரஷ்யாவுக்கு எதிரான சில வெறுப்பு நடவடிக்கைகளின் விளைவாகவே மேற்கொள்ளப்பட்டன” என்ற தன் முந்தைய கூற்றை மீண்டும் புதின் கூறினார்.

  13. ஜெர்மன் ஊடகத்திற்கு ரஷ்யாவில் கட்டுப்பாடுகள்

    டாய்சா வெலீ அல்லது டி.டபிள்யூ (DW) எனும் ஜெர்மனியின் சர்வதேச ஊடகத்தின் சேவைகளை அணுகுவதற்கு, ரஷ்யாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முன்னதாக, ரஷ்யாவில் பிபிசி சேவைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.

    DW ஊடகத்தின் இணையதளத்தை அணுகுவதற்கு இன்று, வெள்ளிக்கிழமை ரஷ்ய அதிகாரிகள் கட்டுப்பாடுகள் விதித்தனர்.

    யுக்ரேன் மீதான படையெடுப்புக்குமுன்னதாகவே, கடந்த மாதம் DWவின் ரஷ்ய ஒளிபரப்பு சேவை தடை செய்யப்பட்டது. அதன் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரமும் திரும்பப் பெறப்பட்டது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. யுக்ரேன் Vs ரஷ்யா: யாருக்கு பலம் அதிகம்?

    ரஷ்ய படைகள் மீது தாங்கள் ஏற்படுத்திய சேதங்கள் என யுக்ரேன் அவ்வப்போது சில தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதேபோல இந்த தகவல்களை பிபிசி சரிபார்க்க முடியவில்லை என்பதை நாங்கள் மீண்டும் தெரிவித்து கொள்கிறோம்.

    அதேபோல சமீபமாக யுக்ரேனிய ஆயுதப் படை, சுமார் 9 ஆயிரம் ரஷ்ய படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது.

    217 டாங்கர்கள்

    90 பீரங்கிகள்

    31 ஹெலிகாப்டர்கள்

    30 விமானங்கள் மற்றும் பிற விமானங்கள்

    தனது பங்கிற்கு ரஷ்யா நேற்று முதன்முறையாக தனது தரப்பில் இழப்புகள் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டது. 498 ரஷ்ய படை வீரர்கள் உயிரிழந்ததாகவும், 1,600 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

    அதேபோல 2,870 யுக்ரேனிய படைவீரர்கள் மற்றும் தேசியவாதிகளை தாங்கள் கொன்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

    ஆயுத பலம்
  15. அணுமின் நிலையம் மீதான தாக்குதல் ஆறு செர்னோபில்களுக்கு சமம்: யுக்ரேன் அதிபர்

    வொலோடிமிர் ஸெலென்ஸ்கி
    படக்குறிப்பு, வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    ஸாப்போரீஷியா அணுமின் நிலையம் மீதான ரஷ்யாவின் தாக்குதல், “ஆறு செர்னோபில்” அணு உலைகளுக்கு சமமான அழிவுகளை ஏற்படுத்தியிருக்கும் என, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

    “யுக்ரேன் மக்களே! யுக்ரேனுடைய வரலாறு, ஐரோப்பாவினுடைய வரலாற்றின் திசையை நிறுத்தும் ஒரு இரவிலிருந்து நாம் உயிர்பிழைத்துள்ளோம்” என அவர் தன்னுடைய தொலைக்காட்சி உரையை தொடங்கினார்.

    தாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்துதான், அணுமின் நிலையத்தில் நேரடியாக ஷெல் தாக்குதலை ரஷ்யா தொடுத்திருக்கும்என, அவர் தெரிவித்தார். இந்த தாக்குதலை, “இதுவரை கேட்டிராத அளவுக்கான பயங்கரவாதம் இது” என தெரிவித்தார்.

    “இது எப்படி சாத்தியம்? 1986ல் செர்னோபில் அணு உலை விபத்தால் ஏற்பட்ட விளைவுகளை நாம் இணைந்து போராடவில்லையா?” என அவர் ரஷ்ய மக்களை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.

    “நீங்கள் (ரஷ்யர்கள்) வாழ விரும்புகிறீர்கள் என, வீதிகளில் இறங்கி உங்கள் அரசாங்கத்திடம் கூறுங்கள்” என அவர் வலியுறுத்தினார்.

    உலக நாடுகளின் தலைவர்களுடன் தான் தொடர்பில் இருப்பதாக, ஸெலென்ஸ்கி தெரிவித்தார். அவர்கள் அணுமின் நிலையத்தை சுற்றி நடப்பவை குறித்து “அதிர்ச்சியில்” இருப்பதாகவும் அவர் கூறினார்.

    "அணுசக்தி பயங்கரவாத அரசுக்கு" எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்தினார்.

    “ரஷ்யா எங்கு இருக்கிறது என கதிர்வீச்சுக்கு தெரியாது. உங்கள் நாட்டின் எல்லைகள் குறித்து கதிர்வீச்சுக்கு தெரியாது” என்றார்.

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, அடுத்த 24 மணி நேரத்தில் 2,200 இந்தியர்களை அழைத்து வரும் 11 விமானங்கள் - இந்திய விமான போக்குவரத்துத்துறை

    இந்திய குடிமக்களை மீட்பதற்கான ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ், 14 சிவிலியன் விமானங்கள் மற்றும் 3 C-17 IAF விமானங்கள் உட்பட யுக்ரேனின் அண்டை நாடுகளில் இருந்து 17 சிறப்பு விமானங்கள் இன்று நாடு திரும்பியுள்ளன.

    மேலும் ஒரு சிவிலியன் விமானம் இன்றைய தினம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிவிலியன் விமானங்கள் 3,142 பேரை அழைத்து வந்துள்ளன. C-17 விமானங்கள் 630 பயணிகளை அழைத்து வந்துள்ளன. இதுவரை, 43 சிறப்பு சிவிலியன் விமானங்கள் மூலம் 9,364 இந்தியர்கள் யுக்ரேனில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். C-17 ரக 7 விமான சேவைகள் மூலம் இதுவரை 1,428 பயணிகளை யுக்ரேனின் எல்லையில் உள்ள நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    இது தவிர, இந்தியாவில் இருந்து 9.7 டன் நிவாரணப் பொருட்களை சி17 ரக போர் விமானம் யுக்ரேனின் அண்டை நாடுகளுக்கு கொண்டு சென்றுள்ளன.

    இன்றைய சிவிலியன் விமானங்களில் புக்கரெஸ்டில் இருந்து 4, கோசிஸிலிருந்து 2, புடாபெஸ்டிலிருந்து 4, ஸெஸ்ரோவில் இருந்து 3 மற்றும் சுசேவாவிலிருந்து 2 அடங்கும்,

    அதே நேரத்தில் இந்திய விமானப்படையின் இரு விமானங்கள் புக்காரெஸ்டிலிருந்து 2 விமானங்களையும் புடாபெஸ்டிலிருந்து 1 விமானத்தையும் இயக்கியது.

    நாளை 11 சிறப்பு சிவிலியன் விமானங்கள் 2,200க்கும் மேற்பட்ட இந்தியர்களை தாயகத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 10 சேவைகள் டெல்லியிலும், ஒன்று மும்பையிலும் தரையிறங்கும்.

    5 விமானங்கள் புடாபெஸ்டில் இருந்தும், 2 ஸெஸ்ரோவில் இருந்தும் 4 சுசேவாவிலிருந்தும் புறப்படும்.

    நான்கு C-17 விமானங்கள் ருமேனியா, போலாந்து மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு புறப்பட்டுள்ளன. அவை இன்று நள்ளிரவு அந்த நாடுகளை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. ஸாப்போரீஷியா அணுமின் நிலையத்திலிருந்து எவ்வித கதிர்வீச்சும் வெளியேறவில்லை: பன்னாட்டு அணுசக்தி முகமை

    யுக்ரேன் நெருக்கடி

    பன்னாட்டு அணுசக்தி முகமையின் தலைமை இயக்குநர் ரஃபேல் கிராஸி, ஸாப்போரீஷியா அணு மின் நிலையம் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், “அணுமின் நிலையத்திற்குள் உள்ள ஒரு கட்டடத்தின் மீது இரவில் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த கட்டடம், அணு உலையின் பகுதி அல்ல. அக்கட்டடத்தில் மட்டும் ஏற்பட்ட தீ, தீயணைப்புப் படையினரால் அணைக்கப்பட்டது. அணு உலையில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. அணு உலையிலிருந்து எவ்வித கதிர்வீச்சும் வெளியேறவில்லை” என தெரிவித்தார்.

    இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள் அல்ல எனவும், அணு மின் நிலையத்தின் காவல் அதிகாரிகள் ஆவர்.

    இந்த அணுமின் நிலையத்தில் 6 அணு உலைகள் இருப்பதாகவும் அதில் ஒரு அணு உலை மட்டும் 60 சதவீத கொள்ளளவுடன் இயங்குவதாகவும் கிராஸி தெரிவித்தார்.

    அங்கு சவாலான மற்றும் பதற்றமான சூழல் நிலவுவதாக, அணு உலையை இயக்குபவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

  18. யுக்ரேன் - ரஷ்யா மோதலால் இலங்கையின் சுற்றுலாத்துறை பாதிப்பு - எப்படி ?

    இலங்கை

    தெற்காசிய நாடுகளில் சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்ற நாடுகளில் இலங்கை முன்னணி வகித்து வருகின்ற போதிலும், கடந்த சில வருடங்களாகவே இலங்கையின் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதை காண முடிகின்றது.

  19. ரஷ்யாவில் கடைசி ஒளிபரப்பை முடித்துக்கொண்டு வெளியேறிய தொலைக்காட்சி ஊழியர்கள்

    ரஷ்ய ஊடகம்

    பட மூலாதாரம், TV Rain

    படக்குறிப்பு, அரங்கிலிருந்து வெளியேறும் தொலைக்காட்சி ஊழியர்கள்

    ரஷ்ய ஆயுதப்படை குறித்து “போலி” செய்திகளை பரப்புவோரை 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கும் வகையிலான சட்டம், ரஷ்ய நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், ரஷ்ய படையெடுப்பு குறித்து ஒளிபரப்பியதால் அழுத்தத்திற்கு உள்ளானரஷ்யாவின் கடைசி சுயாதீன தொலைக்காட்சி ஊடகமான ‘டிவி ரெயின்’ (TV Rain),நேற்று, வியாழக்கிழமை, அதன் ஒளிபரப்பை காலவரையறையின்றி நிறுத்தியது.

    டோஜ்ட் (Dozhd) எனவும் அழைக்கப்படும் இந்த சேனலின் ஊழியர்கள், அரங்கிலிருந்து வெளியேறுவதை காட்டி, அதன் இறுதி ஒளிபரப்பை முடித்தது.

    ரஷ்யாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பு, அந்த சேனல் “தீவிரவாதத்தைத் தூண்டுகிறது. ரஷ்ய குடிமக்களை துன்புறுத்துகிறது, பொது அமைதி மற்றும் பாதுகாப்பை பெருமளவில் குலைக்கிறது மற்றும் போராட்டங்களை உக்க்குவிக்கிறது” என தெரிவித்துள்ளது.

  20. அணுஉலை மீதான தாக்குதல் போரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது – நேட்டோ தலைவர்

    யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்

    பட மூலாதாரம், AFP/GETTY

    படக்குறிப்பு, யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்

    மேற்கு நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள், யுக்ரேனில் நடைபெறும் போர் குறித்த தங்களின் எதிர்வினை குறித்து ஆலோசிக்க பிரஸ்ஸல்ஸில் கூடியுள்ளதாக பிபிசி நிருபர் ஜேம்ஸ் லேண்டேல் முன்னதாக தெரிவித்திருந்தார்.

    இதில், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கனை வரவேற்ற நேட்டோ பொதுச் செயலாளர் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், அணு மின் நிலையம் மீதான ஷெல் தாக்குதல் உட்பட யுக்ரேனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

    “பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இரவில் அணுமின் நிலையம் மீதான தாக்குதல்கள் குறித்தும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த போரின் பொறுப்பற்ற தன்மையையும், அதனை முடிவுக்குக் கொண்டு வருவதன் அவசியத்தையும், யுக்ரேனிலிருந்து ரஷ்யா தன் துருப்புகளை திரும்பப்பெறுவதையும், ராஜீய முயற்சிகளில் நல்நம்பிக்கை வைப்பதையும் இது உணர்த்துகிறது” என அவர் தெரிவித்தார்.

    ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸிப்போரீஷியா அணுமின் நிலையம், தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.