ரஷ்யா-யுக்ரேன் மோதல்: குடிமக்களிடம் துப்பாக்கியை கொடுத்து சண்டையிட யுக்ரேனிய அதிபர் அழைப்பு

யுக்ரேனிய தலைநகரில் ரஷ்ய படைகள் முன்னேறும்போது, படையெடுக்கும் துருப்புகளை எதிர்க்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறு அதிகாரிகள் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் இரண்டும் கியவ் மக்களிடம், “படைகளின் நடமாட்டம் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவும் பெட்ரோல் குண்டுகளை உருவாக்கவும் எதிரிகளைச் செயலிழக்க வைக்கவும் வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

அ.தா. பாலசுப்ரமணியன்

  1. நிறைவடைகிறது பிப்ரவரி 25ஆம் தேதி நேரலை பக்கம். இதுவரை நடந்த நிகழ்வுகளின் செய்தித் துளிகள் இதோ...

    இதுவரை நடந்த நிகழ்வுகளின் செய்தித் துளிகள் இதோ...

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • ரஷ்ய தலைவர் விளாதிமிர் புதின் மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் அவர்களின் ஐரோப்பிய ஒன்றிய சொத்துகள் முடக்கப்படும். ஆனால், பயண தடை விதிக்கப்படாது என பிபிசி புரிந்து கொண்டிருக்கிறது.முன்னதாக இதேபோன்ற தடையை பிரிட்டனும் புதின் மற்றும் லாவ்ரோஃப் மீது விதித்தது.
    • தலைநகர் கியவில் பொதுமக்களுக்கு துப்பாக்கிகளைக் கொடுத்து ரஷ்ய படையினரை எதிர்க்குமாறு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.
    • ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் யுக்ரேனில் ஆளும் அதிபரின் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுமாறு அந்நாட்டு ராணுவத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
    • யுக்ரேன் எல்லையில் இருந்து வெளியேறி ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வர டெல்லி மற்றும் மும்பையில் இருந்து தனி விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
    • யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தலைநகரை விட்டு வெளியேறியதாக ரஷ்ய ஊடகங்களில் வதந்தி பரவிய விலையில், தலைநகர் கியெவின் வீதியில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர்
    • கியவின் மையப்பகுதியில் இருந்து 50 கிமீ தூரத்தில் ரஷ்ய படைகள் நிலைகொண்டிருப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
    • ஐ.நா அகதிகள் அமைப்பு, சுமார் 100,000 பேர் ஏற்கெனவே இடம் பெயர்ந்துள்ளதாக மதிப்பிடுகிறது. அதேநேரம், மோதல் தீவிரமடையும்போது 5 மில்லியன் பேர் வரை வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்யலாம் எனவும் நம்புகிறது.
    • யுக்ரேனிய தலைநகரில் ரஷ்ய படைகள் முன்னேறும்போது, படையெடுக்கும் துருப்புகளை எதிர்க்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறு அதிகாரிகள் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.
    ரஷ்யா யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

    ரஷ்யா யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

  2. யுக்ரேனியர்களுக்கு ஆதரவாக ரஷ்யாவில் திரண்ட மக்கள் - காணொளி

    அதிர்ச்சி, அச்சம், திகைப்பு. யுக்ரேன் நிலவரம் குறித்து ரஷ்யாவின் தலைநகரம் மாஸ்கோவில் இருக்கும் பலரின் மனநிலையை விவரிக்க பொருத்தமான வார்த்தைகள் தற்போதைக்கு இவைதான்.

    அதேசமயம், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நடவடிக்கை கண்டனத்துக்குரியதா அல்லது பாராட்டுக்குரியதா என்ற விவாதமும் இருக்கத்தான் செய்கிறது. இதுகுறித்து ரஷ்ய தலைநகரில் மக்கள் மனநிலை என்ன என்று இந்த காணொளியில் பார்க்கலாம்.

    காணொளிக் குறிப்பு, தாய்நாட்டுக்கு எதிராகவே மாஸ்கோவில் போராடத் திரண்ட பொதுமக்கள்
  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனில் இருந்து வெளியேறி ஹங்கேரி, ருமேனியாவில் தஞ்சம் அடைந்தவர்களை மீட்க தனி விமானங்களை அனுப்பும் ஏர் இந்தியா

    யுக்ரேன் எல்லையில் இருந்து வெளியேறி ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வர டெல்லி மற்றும் மும்பையில் இருந்து தனி விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பான தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், ஹங்கேரியின் புடாபெஸ்ட், ருமேனியாவின் புகாரெஸ்ட் ஆகிய இடங்களுக்கு இந்த விமானங்கள் அனுப்பப்பட்டு அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்யா யுக்ரேன் மோதல்: "நாங்கள் இன்னும் கியெவில்தான் இருக்கிறோம்" - வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தலைநகரை விட்டு வெளியேறியதாக ரஷ்ய ஊடகங்களில் வதந்தி பரவிய விலையில், தலைநகர் கியெவின் வீதியில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர்

    "நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்," என்று அவர் அந்த காணொளியில் கூறியுள்ளார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போது அவரைச் சுற்றிலும் அவரது முக்கிய ஆலோசகர்கள் சூழ்ந்திருந்தனர்.

    "நாங்கள் எங்கள் சுதந்திரத்தை, எங்கள் நாட்டை பாதுகாக்கிறோம். நாங்கள் தொடர்ந்து அதை செய்வோம்," என்று காணொளியில் ஸெலென்ஸ்கி பேசியிருக்கிறார்.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, பிரிட்டன்: கியவின் மையப்பகுதியில் இருந்து 50 கிமீ தூரத்தில் ரஷ்ய படைகள்

    கியவின் மையப்பகுதியில் இருந்து 50 கிமீ தூரத்தில் ரஷ்ய படைகள் நிலைகொண்டிருப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

    அவர்கள் தலைநகர் கியவை நோக்கி முன்னேறி வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை கூறியிருக்கிறது.

    இது தொடர்பான சமீபத்திய பாதுகாப்பு உளவுத்தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரிட்டன் பாதுகாப்புத்துறை, தலைநகர் கியவை நோக்கி ரஷ்ய கவச வாகனங்கள் சென்று கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    ரஷ்ய துருப்புகளுக்கும் யுக்ரேனிய படையினருக்கும் இடையே தலைநகருக்கு வடக்கே உள்ள புறநகர் பகுதிகளில் நடக்கும் மோதல்களை தமது அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பாளர்கள் என்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

  6. ரஷ்யா - யுக்ரேன் மோதல் - களத்தில் இருந்து சில படங்கள்

    யுக்ரேன் முழுவதும் சண்டை நடந்து வரும் நிலையில், ரஷ்ய படைகளின் தாக்குதலைத் தொடர்ந்து மக்கள் கியவில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

    களத்தில் ஏற்பட்ட நெருக்கடியின் விளைவுகளைக் காட்டும் சில படங்கள்

    குடும்பங்கள் அதிக எண்ணிக்கையில் கியவை விட்டு வெளியேறுகின்றன. ரயில்களில் நிறைந்திருக்கும் குடும்பங்கள் மேற்கு போலந்துக்குச் செல்கின்றன.

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, குடும்பங்கள் அதிக எண்ணிக்கையில் கியவை விட்டு வெளியேறுகின்றன. ரயில்களில் நிறைந்திருக்கும் குடும்பங்கள் மேற்கு போலந்துக்குச் செல்கின்றன.
    மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் கியவில் இருந்து வெளியேறுவதற்கு ரயில்களைப் பிடிக்க காத்திருக்கின்றனர்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் கியவில் இருந்து வெளியேறுவதற்கு ரயில்களைப் பிடிக்க காத்திருக்கின்றனர்
    யுக்ரேனிய படைகள் தலைநகரம் முழுவதும் காணப்படுகின்றன

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, யுக்ரேனிய படைகள் தலைநகரம் முழுவதும் காணப்படுகின்றன
    யுக்ரேன் தலைநகரில் ஒரே இரவில் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் ராக்கெட் குப்பைகளை ஒளிப்படம் எடுக்கும் கியவ் மக்கள்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, யுக்ரேன் தலைநகரில் ஒரே இரவில் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் ராக்கெட் குப்பைகளை ஒளிப்படம் எடுக்கும் கியவ் மக்கள்
  7. ரஷ்யா - யுக்ரேன் மோதல்: அதிபரின் ஆட்சியை கவிழ்க்க யுக்ரேனிய ராணுவத்துக்கு புதின் அழைப்பு - இதுவரை நடந்தது என்ன?

    யுக்ரேனில் பலவும் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்திய தகவல்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

    • ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் யுக்ரேனில் ஆளும் அதிபரின் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுமாறு அந்நாட்டு ராணுவத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
    • கியவ் அருகேயுள்ள ஹாஸ்டாமல் விமான நிலையத்தை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், யுக்ரேனின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டதாகவும் ரஷ்ய படையில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் கூறுகிறது.
    • ரஷ்ய படைகளை எதிர்ப்பதற்காக நகரத்தைப் பாதுகாக்க யுக்ரேனிய ராணுவ வாகனங்கள் கியவ் நகருக்குள் நுழைந்துள்ளன.
    • பெட்ரோல் குண்டுகள் தயாரிப்பதற்கான வழிமுறைகளுடன் 18,000 இயந்திர துப்பாக்கிகள் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • படையெடுப்பு தொடங்கியதிலிருந்து சுமார் 450 ரஷ்ய வீரர்கள் மற்றும் 57 பொதுமக்கள் உட்பட 194 யுக்ரேனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பிரிட்டன் ஆயுதப்படை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
    • இந்தப் படையெடுப்பில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் உயிரிழந்ததாக யுக்ரேன் கூறுகிறது.
    • மின்ஸ்கில் யுக்ரேனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
    • போலந்து தனது வான்வெளியில் ரஷ்ய விமான நிறுவனங்களுக்குத் தடை விதிக்கத் தயாராகி வருவதாக அதன் பிரதமர் கூறியுள்ளார்.
    • ஐ.நா அகதிகள் அமைப்பு, சுமார் 100,000 பேர் ஏற்கெனவே இடம் பெயர்ந்துள்ளதாக மதிப்பிடுகிறது. அதேநேரம், மோதல் தீவிரமடையும்போது 5 மில்லியன் பேர் வரை வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்யலாம் எனவும் நம்புகிறது.
    ரஷ்யா யுக்ரேன் மோதல்
  8. அழுகிய முட்டையைச் சாப்பிட்டதால் 27 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

    சிதம்பரம் அருகே மதிய உணவில் வழங்கப்பட்ட அழுகிய முட்டையைச் சாப்பிட்ட 27 மாணவர்கள், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலட்சியத்தால் இவ்வாறு நடைபெற்றுள்ளதாகக் கூறும் பெற்றோர்கள், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வித் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    அழுகிய முட்டையைச் சாப்பிட்டதால் 27 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

    “காலாவதியான முட்டையை மதிய உணவில் மாணவர்களுக்கு வழங்கியதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இப்பள்ளியைச் சேர்ந்த 27 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மானவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். யாருக்கும் வேறு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தச் சமப்வம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளோம்,” என்று பிபிசியிடம் வட்டாட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் தலைநகர் கியெவ் வான் பகுதியில் மிகப்பெரிய வெடிப்பு - காணொளி

    காணொளிக் குறிப்பு, WATCH: Huge explosion seen in sky over Ukraine's capital Kyiv

    யுக்ரேனிய தலைநகரான கீயவ் வான் பகுதியில் மிகப்பெரிய வெடிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. போஸ்னியாக்கி சுற்றுப்புறத்தில் அந்த சம்பவம் நடந்ததை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.

  10. யுக்ரேன் - ரஷ்யா மோதல் மூன்றாம் உலக போருக்கான தொடக்கமா?

    யுக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு மூன்றாம் உலக போருக்கான தொடக்கமா?

  11. ரஷ்யா-யுக்ரேன் மோதல்: கியவ் நகரை காக்க குடிமக்கள் கையில் இயந்திர துப்பாக்கிகள்

    யுக்ரேனிய தலைநகரில் ரஷ்ய படைகள் முன்னேறும்போது, படையெடுக்கும் துருப்புகளை எதிர்க்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறு அதிகாரிகள் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

    பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் இரண்டும் கியவ் மக்களிடம், “படைகளின் நடமாட்டம் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவும் பெட்ரோல் குண்டுகளை உருவாக்கவும் எதிரிகளைச் செயலிழக்க வைக்கவும் வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.

    தலைநகரைக் காக்க குடிமக்கள் கையில் இயந்திர துப்பாக்கிகள்

    பட மூலாதாரம், AFP via Getty Images

    பெட்ரோல் குண்டுகளை எப்படி உருவாக்குவது என்ற வழிகாட்டுதல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை உள்துறை அமைச்சகம் அதன் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.

    உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் வாடின் டெனிசென்கோ இதுகுறித்துப் பேசியபோது, “18,000 இயந்திர துப்பாக்கிகளை கியவில் நம் தலைநகரைக் காக்க விரும்பும் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

    யுக்ரேனிய ராணுவ தளவாடங்கள் இப்போது கியவ் நகருக்குள் நுழைகின்றன. அதைக் காக்குமாறு, கியவில் வசிக்கும் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து அதைப் படம் பிடிக்காதீர்கள். இது நம் நகரத்தைப் பாதுகாக்க அவசியம்,” என்று கூறியுள்ளார்.

  12. யுக்ரேன் தலைநகரின் மையத்தில் வானளாவ எழும்பும் கரும் புகை

    யுக்ரேன் தலைநகரின் மையத்தில் வானளாவ எழும்பும் கரும் புகை

    பிபிசியின் ஜேம்ஸ் ஒயிட் இந்த படங்களை கியவின் மையப்பகுதியில் இருந்து எடுத்தார்.

    யுக்ரேன் தலைநகரில், நீப்பர் ஆற்றின் கிழக்குப் பகுதியில் கரும்புகை வானளாவ எழும்பி வந்தது.

  13. யுக்ரேனில் உள்ள பிள்ளைகளை மீட்டுத் தர சேலம் ஆட்சியரிடம் மனு அளித்த பெற்றோர்கள்

    யுக்ரேனில் சிக்கித் தவிக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களை மீட்கக் கோரி அவர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

    சேலத்தில் உள்ள குரங்கு சாவடியைச் சேர்ந்த விஸ்வநாத் என்பவரின் மகள் ஹரிபிரியா யுக்ரேனில் 6ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். ஆத்தூரில் உள்ள செல்லியம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகள் ரித்திகா யுக்ரேனில் 4ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். அதேபோல், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த இந்துஜா மற்றும் அனிதா ஆகியோரும் அங்கு படித்து வருகின்றனர்.

    யுக்ரேன் எல்லையில் இருக்கும் இந்திய மாணவர்கள்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, யுக்ரேன் எல்லையில் இருக்கும் இந்திய மாணவர்கள்

    இதுவரை 6 பேர் தங்களது பிள்ளைகளை யுக்ரேனில் இருந்து மீட்டுத் தரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களுடைய பெற்றோர்கள் மனு கொடுத்தனர்.

    இது குறித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், “யுக்ரேனில் சிக்கியுள்ள சேலம் மாவட்ட நபர்களின் விவரங்களைச் சேகரித்து அரசுக்கு அனுப்பி வருகிறோம். அவர்களை பத்திரமாக மீட்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,” என்று தெரிவித்தார்.

  14. ரஷ்யா - யுக்ரேன் மோதல்: நேட்டோ படைகள் இன்னும் களமிறங்காதது ஏன்?

    உலக நாடுகள் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தடுப்பதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த தாக்குதலின் காரணமாக என்னென்ன பாதிப்புகளை இந்தியா உள்ளிட்ட நாடுகள் சந்திக்கும், ரஷ்யா மற்றும் நேட்டோ ஆகிய இரண்டு தரப்புக்கும் எந்தெந்த நாடுகள் ஆதரவு தெரிவிக்கின்றன என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  15. யுக்ரேன் எல்லையில் வெளியேறும் முயற்சியில் 40 இந்திய மாணவர்கள்

    வீவ்வில் உள்ள டேன்லோ ஹாலிட்ஸ்கி மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 40 இந்திய மருத்துவ மாணவர்களைக் கொண்ட குழு, யுக்ரேனை விட்டு வெளியேறுவதற்காக யுக்ரேன்-போலந்து எல்லையை நோக்கி நடந்து செல்கின்றனர். எல்லையிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் கல்லூரி பேருந்தில் இருந்து அவர்கள் இறக்கிவிடப்பட்டனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. யுக்ரேன்–ருமேனியா எல்லையில் இந்திய வெளியுறவுத் துறை முகாம்கள்

    முதல் கட்டமாக இந்திய மாணவர்களில் ஒரு பகுதியினர் செர்னிவ்சியில் இருந்து யுக்ரேன்–ருமேனியா எல்லைக்குச் சென்றுள்ளனர்.

    இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தினுடைய முகாம் அலுவலகங்கள் இப்போது மேற்கு யுக்ரேனில் உள்ள வீவ் மற்றும் செர்னிவ்சி நகரங்களில் செயல்படுகின்றன. இந்த முகாம் அலுவலகங்களுக்கு கூடுதல் ரஷ்ய மொழி பேசும் அதிகாரிகள் அனுப்பப்படுகின்றனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் உடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயார் - ஆனால்?

    ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப், மின்ஸ்க் நகரத்தில் யுக்ரேனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    ஆனால், யுக்ரேன் “ராணுவமயமாக்கல் இல்லாமை உட்பட “சார்பற்ற நிலையை” அறிவிப்பதாக இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிவித்துள்ளது. எப்போதும் யுக்ரேன் நேட்டோவில் சேரக்கூடாது என்பதே ரஷ்யாவின் நோக்கமாக இருந்து வருகிறது.

    யுக்ரேன் அதிபர், விளாதிமிர் புதினுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இந்த அடிப்படையில் அவர் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவார் என்பதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லை.

    மின்ஸ்க் நகரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. ஏனெனில், 2014-ல் கிழக்கு யுக்ரேனில் வெடித்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தங்கள் அங்கு தான் கையெழுத்தாகின.

    யுக்ரேனை ஆக்கிரமித்ததன் மூலம், ரஷ்யாவின் தலைவர் அந்த ஒப்பந்தஙக்ளை கிழித்தெறிந்ததாகக் கருதப்படுகிறது.

    முன்னதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோஃப் யுக்ரேன் ராணுவம் ஆயுதங்களைக் கீழே போடும் வரை பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்று கூறியிருந்தார்.

  18. ரத்து செய்யப்பட்ட ரஷ்ய ஃபார்முலா 1 கார் பந்தயம்

    ஃபார்முலா 1 ரஷ்ய க்ராண்ட் ப்ரிக்ஸ்

    பட மூலாதாரம், BBC Sport

    ரஷ்ய ஃபார்முலா 1 கிராண்ட் ப்ரிக்ஸ் கார் பந்தயம், யுக்ரேன் மீதான படையெடுப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இது குறித்து, ஃபார்முலா1 வெளியிட்ட அறிக்கையில், "இப்போதைய சூழலில் ரஷ்ய க்ராண்ட் ப்ரிக்ஸை நடத்துவது சாத்தியமற்றது. யுக்ரேனில் இருக்கும் அதிர்ச்சி மற்றும் கவலையளிக்கும் சூழல் விரைவில் சரியாகி அமைதி திரும்பும் என்றும் நம்புவோம்," என தெரிவித்துள்ளது.

    செப்டம்பர் 25ஆம் தேதி சோச்சியில் ரஷ்ய கிராண்ட் ப்ரிக்ஸ் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

  19. ரஷ்யா - யுக்ரேன் மோதல்: 60 வயதுக்கு மேற்பட்டவர்களையில் ராணுவத்தில் சேர்க்கும் யுக்ரேன்

    யுக்ரேனிய பாதுகாப்புப் படை, ஒரு ட்வீட்டில் வயதைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்கு ஆட்சேர்ப்புக்கான அழைப்பை வெளியிட்டது.

    படைத் தளபதியின் ஓர் அறிக்கை, “வயது கட்டுப்பாடுகள் இல்லை,” என்று குறிப்பிட்டிருந்தார். அது 18 வயதுக்கும் கீழுள்ளவர்களும் சேர்க்கப்படலாம் என்பதை குறிப்பதைப் போல் இருந்தது.

    60 வயதுக்கு மேற்பட்டவர்களையில் ராணுவத்தில் சேர்க்கும் யுக்ரேன்

    பட மூலாதாரம், Reuters

    இருப்பினும், பாதுகாப்புத் துறை அமைச்சர் அலெக்ஸே ரெஸ்னிகோவின் புதிய அறிக்கை, “வயதுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களைக் குறிக்கிறது என்றும் சிறார்களைக் குறிக்கவில்லை என்றுன் தெளிவுபடுத்தியது.

    “தார்மீக ரீதியாகவும் நேரடியாகவும் எதிரிகளை எதிர்க்கவும் தோற்கடிக்கவும் தயாராக உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட தேச பக்தர்களையும் படைகளில் சேர்க்க முடிவு செய்துள்ளேன்,” என்று ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார்.

  20. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்ய அதிபரின் ஐரோப்பிய சொத்துகளை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் ஆகியோரின் ஐரோப்பிய சொத்துகளை முடக்க முடிவு செய்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

    எப்படியிருப்பினும், இருவரில் ஒருவராவது ஐரோப்பிய ஒன்றியத்தில் குறிப்பிடத்தக்க சொத்துகளை வைத்துள்ளாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

    கூடுதல் விவரங்கள் கிடைக்கும்போது உங்களுக்கு அதைத் தெரியப்படுத்துகிறோம்.