ரஷ்ய தாக்குதல்: அதிகரிக்கும் மனிதாபிமான நெருக்கடி - பேச்சுக்கு அழைக்கும் ஸெலென்ஸ்கி

படைவிலக்கல் மற்றும் நடுநிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் யுக்ரேனில் மேற்கொள்ளப்படும் ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என்று பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கிடம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

விஷ்ணுப்ரியா ராஜசேகர்

  1. வணக்கம் நேயர்களே!

    மார்ச் 3ஆம் தேதி, புதன்கிழமை வெளியான ரஷ்யா - யுக்ரேன் மோதல் தொடர்பான நேரலைப் பக்கம் முடிவடைந்தது.

    இன்று நடந்தவற்றின் சுருக்கம்:

    • யுக்ரேனில் உள்ள செர்னிவ் நகரில் நடந்த வான் தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என யுக்ரேன் பிரதிநிதி மிகெய்லோ போடோல்யாக் தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் தங்களுக்கு போர் விமானங்களை அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
    • படைவிலக்கல் மற்றும் நடுநிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் யுக்ரேனில் மேற்கொள்ளப்படும் ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என்று பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கிடம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்ய படைகள் யுக்ரேனின் கெர்சன் நகரில் உள்ள பிராந்திய நிர்வாக கட்டடத்தை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. இதனை நிர்வாக தலைவர் ஹென்னடி லஹுடா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    • படையெடுப்பு தொடங்கியதிலிருந்து சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் யுக்ரேனைவிட்டு வெளியேறிவுள்ளதாக ஐ.நா தெரிவித்திருந்தது.
    • தங்களது குடிமக்களை ரஷ்யாவைவிட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது ஃபிரான்ஸ்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் காலையில் மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, ’பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை’

    ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என யுக்ரேன் பிரதிநிதி மிகெய்லோ போடோல்யாக் தெரிவித்துள்ளார்.

    “சமீபத்திய பேச்சுவார்த்தையில் நாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் எட்டப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் இருதரப்பும் மிக விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    ”இந்த படையெடுப்பால் ஏற்பட்டுள்ள மனிதநேய நெருக்கடி குறித்து நாங்கள் விரிவாக பேசிசோம் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

  3. யுக்ரேனிலிருந்து இருந்து இந்தியா மீட்டது எப்படி?

    வாட்சப் மூலம் மீட்ட இந்திய அரசு; ஆனால் கீயவ் மற்றும் கார்ஹீவில் உள்ள இந்திய மாணவர்களின் நிலை என்ன?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனில் உள்ள இந்தியர்களுக்காக பாதுகாப்புத்துறை வழங்கிய அறிவுறுத்தல்கள்

    ரஷ்யா யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேனில் குறிப்பாக கார்கிவ் பகுதியில் சிக்கியுள்ள தமது குடிமக்களுக்கு இந்திய பாதுகாப்புத்துறை அறிவுறுரை வழங்கியுள்ளது.

    அதன்படி, ஏதேனும் கடினமான சூழ்நிலையில் இந்தியர்கள் சிக்கிக் கொண்டால், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அவர்களுக்கு சில குறிப்புகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    உள்ளூர் விதிகள் மற்றும் பாதுகாப்பு பற்றிய தகவல்களையும் பாதுகாப்புத்துறை பகிர்ந்துள்ளது.

    அதன் முக்கிய அம்சங்கள்:

    எதிர்கொள்ள வேண்டிய கடினமான சூழ்நிலைகள்

    விமான தாக்குதல், ட்ரோன் தாக்குதல்ஏவுகணை தாக்குதல்போர் ஆயுதங்களால் தாக்குதல்ஷெல் தாக்குதல்கையெறி குண்டுவெடிப்புபெட்ரோல் குண்டு தாக்குதல்கட்டட இடிபாடுகள் சரிவதுஇணைய இணைப்பு இல்லாததுமின்சாரம்/உணவு/தண்ணீர் தட்டுப்பாடுமிகவும் குளிர்ந்த காலநிலையை எதிர்கொள்வதுஅதிர்ச்சி அடையும் நிலையை அடைவதுகாயம் அல்லது மருத்துவ உதவி இல்லாத நிலைமைபோக்குவரத்து தட்டுப்பாடுராணுவ வீரர்களுடன் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் நிலை வருதல்சக இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மன வலிமையுடன் இருங்கள். 10 இந்திய மாணவர்களைக் கொண்ட சிறிய குழுக்களாக உங்களை ஒழுங்கமைக்கவும் உங்கள் இருப்பிடத்தை குழு ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவிக்கவும் வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி அதில் காணப்படும் அனைத்து தகவல்களையும் தூதரகத்திலோ டெல்லியிலோ பகிரவும்ஃபோன் பேட்டரியைச் சேமிக்க குழு ஒருங்கிணைப்பாளர் அல்லது துணை ஒருங்கிணைப்பாளரை மட்டுமே அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கவும். என்ன செய்யக்கூடாது உங்கள் பதுங்கு குழி, அடித்தளம் அல்லது தங்குமிடத்தை விட்டு வெளியேறாதீர்கள்நெரிசலான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் உள்ளூர் எதிர்ப்பாளர்களுடன் சேர வேண்டாம் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவும் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளை தொட வேண்டாம் ராணுவ வாகனங்கள் அல்லது அது தொடர்பான எதையும் படம் எடுக்க வேண்டாம் நேரலை போர் சூழ்நிலைகளை படம் எடுக்க வேண்டாம் எச்சரிக்கை சைரன் ஏற்பட்டால், முடிந்தவரை பதுங்குமிடம் தேடுங்கள். நீங்கள் திறந்த வெளியில் இருந்தால், வயிற்றை மண்ணை நோக்கிப்படுத்துபடி உங்கள் பையினால் உங்கள் தலையை மூடிக் கொள்ளுங்கள்.மது அல்லது போதைப்பொருட்களை பயன்படுத்த வேண்டாம் குளிர்ச்சியைத் தவிர்க்கவும்ஈரமான சாக்ஸ் அணிய வேண்டாம் சேதமடைந்த கட்டடங்களை தவிர்க்கவும் குப்பைகள் ஜாக்கிரதைகண்ணாடி ஜன்னல்களிலிருந்து விலகி இருங்கள் சோதனைச் சாவடியில் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் போது திடீர் நடமாட்டங்களைத் தவிர்க்கவும் அல்லது தகாத செயல்களில் ஈடுபடாதீர்கள்.இந்திய குடிமக்களுக்கு உயிர்வாழும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சிறிய கிட் தயாராக வைத்திருப்பது ஒரு விஷயம். இதனுடன், ரஷ்யாவில் பேச்சுவார்த்தைக்கான மூன்று வரிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  5. யுக்ரேனின் செர்னிவ் நகரில் நடந்த வான் தாக்குதல் - இதுவரை 22 பேர் பலி

    யுக்ரேனில் உள்ள செர்னிவ் நகரில் நடந்த வான் தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களாக செர்னிவ் நகரில் கடுமையான ஷெல் குண்டு தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் வான் தாக்குதல், குடியிருப்பு பகுதியில் இலக்கு வைக்கப்பட்டதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என யுக்ரேனின் அவசர சேவை தெரிவித்துள்ளது.

    இந்த ஷெல் குண்டு தாக்குதலில் பல அடுக்குமாடி குடியிருப்புகளும் இலக்கு வைக்கப்பட்டன என பிபிசி யுக்ரேனிய சேவை தெரிவிக்கிறது.

  6. "புதினுடன் பேசுவது மட்டுமே போரை நிறுத்தும்" - ஸெலன்ஸ்கி

    zelensky

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் தங்களுக்கு போர் விமானங்களை அனுப்புமாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸெலன்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    "உங்களால் யுக்ரேனுக்கு மேல் விமானங்கள் பறக்க தடை விதிக்க முடியவில்லை என்றால், எங்களுக்கு விமானங்களை கொடுங்கள்," என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் ரஷ்ய அதிபர் புதினுடன் நேரடியாக உரையாடுவது மட்டுமே போரை தடுப்பதற்கான ஒரே வழி எனவும் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    “நாங்கள் ரஷ்யாவை தாக்கவில்லை. எங்களுக்கு ரஷ்யாவை தாக்குதம் திட்டமில்லை. உங்களுக்கு என்ன வேண்டும்? எங்களின் நிலத்தை விட்டுவிடுங்கள்.” என்றார்.

  7. யுக்ரேன் Vs ரஷ்யா: எட்டாவது நாளாக தொடரும் தாக்குதல் - இதுவரை நடந்தது என்ன?

    யுக்ரேன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டு இன்று எட்டாவது நாளை எட்டியிருக்கிறது. கடந்த ஏழு நாட்களில் அங்கிருந்து பத்து லட்சம் பேர் தப்பித்து வெவ்வேறு பகுதிகளுக்கும் அண்டை நாடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    பல முக்கிய நகரங்கள் மீது தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன - சமீபத்திய தகவலாக யுக்ரேனின் மரியூபோல் நகரம் ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

    அங்கு நடக்கும் சமீபத்திய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

    யுக்ரேனின் தெற்கே உள்ள முக்கிய துறைமுக நகரான கெர்சனை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. ரஷ்ய துருப்புக்களால் கைப்பற்றப்பட்ட முதல் பெரிய நகரம் இது.

    கேந்திர ரீதியாக தெற்கு துறைமுக நகரான மரியூபோல் நகர மேயர், தங்களுடைய பகுதிகளில் மின்சாரம், உணவு, குடிநீர் வசதிகளை ரஷ்ய ராணுவத்தினர் துண்டித்து விட்டதாகக் கூறியுள்ளார்.

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் பிரெஞ்சு அதிபர் எமானுவேல் மக்ரோங்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். யுக்ரேனின் படைவிலக்கலையும் நடுநிலைமையையும் உறுதிப்படுத்தும் தமது லட்சியங்களில் வெற்றி பெறுவோம் என்று அப்போது புதின் கூறியுள்ளார்.

    யுக்ரேனுடன் பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்திக் கொண்டே போனால், அந்த நாடு மீதான நிபந்தனைகளின் பட்டியலில் நீண்டு கொண்டே இருக்கும் என்றும் புதின் எச்சரித்தார்.

    யுக்ரேனிய தரப்புக்கும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்களுக்கும் இடையே பெலூரூஸில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது. மோதல் களத்தில் இருந்து வெளியேறும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான பாதையை உறுதி செய்ய முடியும் என்று யுக்ரேன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    ரஷ்ய ராணுவம் பொதுமக்கள் மீது குண்டுவீச்சு நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து, ரஷ்யா போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்கிறது.

    மூன்றாம் உலக போர், அணு ஆயுதமாக இருக்கும் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் தெரிவித்துள்ளார்.

    பல பெரிய அளவிலான வெடிச்சம்பவங்கள் நடந்தாலும், தலைநகர் கீயவ் யுக்ரேனிய அரசுின் கட்டுப்பாட்டிலேயே இன்னும் உள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை மிகப்பெரிய ரஷ்ய பட்டாளம் தலைநகருக்கு வெகு சில தூரத்திலேயே உள்ளது.

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, பேச்சுவார்த்தை தொடங்கியது

    யுக்ரேனிய அதிபரின் ஆலோசகர் மிகாய்லோ போடோலியாக், அவரும் பிற அதிகாரிகளும் பெலாரஸில் ரஷ்ய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய சாராம்சம்:

    உடனடியான போர் நிறுத்தம்

    போர் நிறுத்தம் குறித்தான ஒப்பந்தம்

    ஷெல் குண்டு தாக்குதலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கான பாதை அமைத்து தரப்பட வேண்டும்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. அலெக்ஸாண்டர் லூகஷென்கோ: புதினின் நண்பர், 'ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி' - யார் இவர்?

    யுக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதலின்போது அடிக்கடி பேசப்படும் பெயர்களுள் ஒன்று அலெக்ஸாண்டர் லூகஷென்கோ. ரஷ்யாவின் நட்பு நாடுகளுள் ஒன்றான பெலாரூஸின் அதிபர் இவர்.

    ரஷ்ய படைகள் தங்கள் மண்ணில் தங்கியிருக்க அனுமதி அளித்ததுடன், யுக்ரேன் தலைநகர் கீயவை நோக்கி ரஷ்ய படைகள் நகர்ந்து செல்வதற்கும் உதவியவர் என்று இவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

    ரஷ்ய அதிபர் புதினுடன் நெருக்கமான நட்பு கொண்டிருக்கும் லூகஷென்கோ, நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் ராணுவ தேவைகளுக்காக ரஷ்யாவை அதிகமாகச் சார்ந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகச் இந்தச் சார்புநிலை அதிகரித்திருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    யுக்ரேனில் ரஷ்யைப் படையெடுப்புக்குத் தூண்டுகோலாகவும், ஆதரவாகவும் லூகஷென்கோ இருப்பதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரூஸ் குற்றம்சாட்டுகிறார்.

  10. "கார்கீவில் உள்ள இந்தியர்கள் கூகுள் படிவம் ஒன்றை நிரப்ப வேண்டும்"

    கார்கீவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக கூகுள் படிவம் ஒன்றை நிரப்ப வேண்டும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

    டிவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள இந்த படிவத்தில் மின்னஞ்சல், பாஸ்போர்ட் எண் போன்ற தகவல்களை நிரப்ப வேண்டும்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. ‘’அடுத்த இரு தினங்களில் யுக்ரேனிலிருந்து 7400 பேர் அழைத்து வரப்படவுள்ளனர்”

    indian student

    பட மூலாதாரம், Getty Images

    இதுவரை 6200 இந்தியர்கள் யுக்ரேனிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர் என இந்தியா தெரிவித்துள்ளது.

    அடுத்த இரு தினங்களில் மேலும் 7400 பேர் அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'ஆப்ரேஷன் கங்கா' திட்டத்தின் மூலம் யுக்ரேனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

    "இந்திய மாணவர்களை வேகமாக மீட்க விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்துடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இணைந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்திய விமான சேவைகள் வேகமான மீட்புப் பணிகளை நோக்கி பணியாற்றி வருகின்றன.

    மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜ்ஜு மற்றும் வி.கே.சிங் ஆகியோர் யுக்ரேனின் அண்டை நாடுகளுக்கு சென்று மீட்புப் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.

    நாளை 3500 இந்தியர்களும் அதற்கு மறு நாள் 3900 இந்தியர்கள் என மொத்தம் 7400 பேர் இருநாட்களில் அழைத்து வரப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  12. "ரஷ்ய நடவடிக்கைகளின் இலக்கு நிச்சயம் நிறைவேற்றப்படும்" - புதின்

    புதின்

    பட மூலாதாரம், Getty Images

    படைவிலக்கல் மற்றும் நடுநிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் யுக்ரேனில் மேற்கொள்ளப்படும் ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என்று பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கிடம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரூங் இன்று தொலைப்பேசியில் உரையாடியபோது அவர் இதனை தெரிவித்தார்.

    இந்த உரையாடல் சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது.

  13. யுக்ரேன் Vs ரஷ்யா: மோதல் எப்போது முடியும்?

    ரஷ்ய படையெடுப்பு குறித்து அண்மைய செய்திகளை வழங்கும் பிபிசி தமிழின் சிறப்பு நேரலை.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, கெர்சன் பிராந்திய நிர்வாக கட்டடத்தை கைப்பற்றியது ரஷ்யா

    ரஷ்ய படைகள் யுக்ரேனின் கெர்சன் நகரில் உள்ள பிராந்திய நிர்வாக கட்டடத்தை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. இதனை நிர்வாக தலைவர் ஹென்னடி லஹுடா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் தங்களது கடமைகளை தொடர்ந்து செய்து வருவதாகவும் லஹுடா தெரிவித்துள்ளார்.

    “நாங்கள் மனிதநேய உதவிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்”

    “போலிச் செய்திகளை நம்பி அஞ்சாதீர்கள்” என லஹுடா தெரிவித்துள்ளார்.

  15. யுக்ரேனிலிருந்து திரும்பிய மாணவர்களுடன் உரையாடிய மோதி

    வாரனாசியில் யுக்ரேனிலிருந்து வந்த மாணவர்களுடன் பிரதமர் மோதி இன்று உரையாடினார். மாணவர்கள் பிரதமர் மோதியிடம் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த மாணவர்கள் வாரணாசி மற்றும் உபி-யின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள்.

    யுக்ரேனிலிருந்து திரும்பிய மாணவர்களுடன் உரையாடிய மோதி

    பட மூலாதாரம், PMO

    யுக்ரேனிலிருந்து திரும்பிய மாணவர்களுடன் உரையாடிய மோதி

    பட மூலாதாரம், PMO

  16. வேக்யூம் வெடிகுண்டு என்றால் என்ன?

    வேக்யூம் வெடிகுண்டு எனப்படும் தெர்மோபரிக் ஆயுதம் என்றால் என்ன, ரஷ்யா அவற்றை யுக்ரேனில் பயன்படுத்தியுள்ளதா?

    யுக்ரேனில் நடந்த சண்டையில் ரஷ்யா தெர்மோபரிக் ஆயுதம் அதாவது வேக்யூம் வெடிகுண்டைப் பயன்படுத்தியதாக மனித உரிமைக் குழுக்களும் அமெரிக்காவுக்கான யுக்ரேன் தூதரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    திங்களன்று யுக்ரேனின் சுமி பிராந்தியத்தில் உள்ள ஒக்திர்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அழித்த வெடிப்பு ஒரு தெர்மோபரிக் ஆயுதத்தால் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது, இருப்பினும் இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

    பரவலாக தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வடகிழக்கு யுக்ரேனில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை ரஷ்யா தாக்கியதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது.

  17. "ரஷ்ய படை வீரர்களை சீண்டாதீர்கள்" - கெர்சன் மக்களுக்கு புதிய கட்டுப்பாடு, கிறிஸ் பெல், பிபிசி நியூஸ்

    vehicle

    பட மூலாதாரம், Reuters

    யுக்ரேனின் முக்கிய துறைமுக நகரமான கெர்சன் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அந்நகரில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நகரவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    நினா (அவரின் முழு பெயரை பயன்படுத்தக் கூடாது என பிபிசி முடிவு செய்துள்ளது): "நகரம் தற்போது அமைதியாக உள்ளது. நேற்றும் அமைதியாகதான் இருந்தது. ஆனால் இதற்கு முன்னதாக இங்கு சண்டையும் வெடிப்புச் சம்பவங்களும் நிகழ்ந்துக் கொண்டிருந்தன."

    “நேற்று யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. நிலைமை மிகவும் ஆபத்தாக இருந்தது. ஆனால் இன்று மக்கள் வெளியே சென்று உணவுப் பொருட்களை வாங்க முயற்சித்து வருகின்றனர்”

    "இருப்பினும் நகரின் புறநகர் பகுதிகளில் சண்டை நடைபெறும் சத்தங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

    "எங்களுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்ய படை வீரர்களை நாங்கள் சீண்டக் கூடாது என எங்கள் அரசுடன் சேர்ந்து அவர்கள் விதிகளை வகுத்துள்ளனர்."

    “நாங்கள் கூட்டமாக இருக்கக்கூடாது. காரை வேகமாக ஓட்ட கூடாது. காரில் உள்ளதை காட்டை நாங்கள் தயாராக இருக்க வேண்டும். யாரையும் சீண்டக் கூடாது.”

    "குடியிருப்புவாசிகளுக்கு தற்போது நீர், மின்சாரம் மற்றும் இணைய வசதிகள் எல்லாம் உள்ளன. அதேபோல மருத்துவசதிகளும் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்."

    “வெகு சீக்கிரத்தில் நிலைமை சரியாகும் என நம்புகிறோம்”

    “சாதரண மனிதர்கள் எந்த ஒரு போர்க்கும் எதிராகதான் உள்ளோம். ஆனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது”

  18. போர்க் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஐசிசி

    யுக்ரேனில் நிகழ்த்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளது சர்வதேச குற்றவியல் நீதிமன்றமான ஐசிசி.

    39 நாடுகளின் வலியுறுத்தலுக்கு பிறகு உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஐசிசியின் தலைவர் கரிம் கான் தெரிவித்துள்ளார்.

    போர்க் குற்றங்கள் குறித்தான குற்றச்சாட்டுகள், மனித நேயத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும்.

    மேலும் 2014ஆம் ஆண்டில் ரஷ்யா க்ரைமியாவை ஆக்கிரமித்து கொண்டது குறித்தும் அந்த விசாரணை விரிவுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐசிசியில் ரஷ்யாவோ அல்லது யுக்ரேனோ இரண்டுமே உறுப்பினர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கரிம் கான் தெரிவித்துள்ளார்.

  19. எந்தெந்த நாட்டிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன?

    உலகில் தற்போது ஒன்பது நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன.

    இந்த நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  20. யுக்ரேன் Vs ரஷ்யா: யாருக்கு பலம் அதிகம்?

    ரஷ்ய படைகள் மீது தாங்கள் ஏற்படுத்திய சேதங்கள் என யுக்ரேன் அவ்வப்போது சில தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதேபோல இந்த தகவல்களை பிபிசி சரிபார்க்க முடியவில்லை என்பதை நாங்கள் மீண்டும் தெரிவித்து கொள்கிறோம்.

    அதேபோல சமீபமாக யுக்ரேனிய ஆயுதப் படை, சுமார் 9 ஆயிரம் ரஷ்ய படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது.

    217 டாங்கர்கள்

    90 பீரங்கிகள்

    31 ஹெலிகாப்டர்கள்

    30 விமானங்கள் மற்றும் பிற விமானங்கள்

    தனது பங்கிற்கு ரஷ்யா நேற்று முதன்முறையாக தனது தரப்பில் இழப்புகள் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டது. 498 ரஷ்ய படை வீரர்கள் உயிரிழந்ததாகவும், 1,600 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

    அதேபோல 2,870 யுக்ரேனிய படைவீரர்கள் மற்றும் தேசியவாதிகளை தாங்கள் கொன்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

    ஆயுத விவரம்