கீயவில் இருந்து வெளியேறிய இந்தியர்கள் - தூதரகம் மூடப்பட்டதாக அறிவிப்பு

கீயவில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்திற்கு அருகில் ஒரு பெரிய புகை மூட்டம் வெளிப்படுவதை காணொளியில் பார்க்கிறோம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. மார்ச் 1 நேரலை நிறைவடைகிறது - புதிய நேரலையில் இணையுங்கள்

    மார்ச் 1, செவ்வாய்க்கிழமை வெளியான யுக்ரேன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை தொடர்பான நேரலைப் பக்கத்தை இத்துடன் நிறைவு செய்கிறோம். மார்ச் 2 புதன்கிழமைக்கான புதிய நேரலையில் எங்களோடு இணைய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

    யுக்ரேனில் நடப்பவை குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

    இதுவரை நடந்த நிகழ்வுகளின் செய்தித் துளிகள் இதோ...

    • யுக்ரேனின் கார்கிவ் நகரில் இன்று காலை வெடிகுண்டு தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார். அவர் கர்நாடகவைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
    • யுக்ரேனின் கார்கிவ் பகுதியில் தாக்குதல் நடத்திய ரஷ்ய படையினர், மறுபுறம் தலைநகர் கீயவில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தையும் தாக்கியுள்ளனர்.
    • மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் இன்று கீயவ் நகரை விட்டு வெளியேறி விட்டதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. அந்த நகரில் இயங்கி வந்த இந்திய தூதரகமும் மூடப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • யுக்ரேனின் கார்கிவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் திங்கட்கிழமை அதிகாலையில் டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக யுக்ரேனிய உள்துறை தெரிவித்துள்ளது.
    • யுக்ரேன் தலைநகரில் உள்ள முக்கிய இலக்குகளை தாக்க தயாராகி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
    • பெலாரூஸ் பேச்சுவார்த்தைக்கு முன்பாக யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி, ரஷ்ய படையினர் ஆயுதங்களை கீழே போடுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் யுக்ரேனுக்கு உறுப்புரிமை வழங்குமாறும் கோரினார்.
    • கீயவ் தாக்குதல்கள் குறித்து ரஷ்யா எச்சரித்துள்ள நிலையில், யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், ரஷ்யாவால் "உளவியல் தாக்குதல்" ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
    • ரஷ்ய படையெடுப்பால் யுக்ரேனில் இருந்து சுமார் 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என்று அகதிகளுக்கான ஐநாவின் அமைப்பு தெரிவித்துள்ளதாக ஏ எஃ பி செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது.
    • நேற்று முன்தினம் (பிப். 27), ஞாயிற்றுக்கிழமை, யுக்ரேனின் வட-கிழக்கு நகரம் ஓக்டிர்காவில் ரஷ்யாவின் பீரங்கித் தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட யுக்ரேன் படையினர் கொல்லப்பட்டதாக, உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் காலையில் மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டுவரும் இந்த நேரலைப் பக்கங்கள் இந்தப் படையெடுப்பில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் அனைத்தையும் காலவரிசைப் படி பார்ப்பதற்கான ஒரு மூலாதாரமாக விளங்கும்.

    • யுக்ரேன் மீது போர் தொடுத்த ரஷ்யா: முதல் நாள் போரில் நடந்தது என்ன? - நேரலை செய்தி
    • போரில் இரண்டாம் நாள் நடந்தது என்ன? நேரலைச் செய்தி
    • போரில் மூன்றாம் நாள் நடந்தது என்ன? நேரலைச் செய்தி
    • யுக்ரேன் போரின் நான்காவது நாளில் நடப்பது என்ன? - நேரலை
  2. யுக்ரேன் தொலைக்காட்சி கோபுரம் மீதான ரஷ்ய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது - யுக்ரேனிய வெளியுறவுத்துறை

    யுக்ரேன்: ஹோலோகாஸ்ட் நினைவிடம் அருகே தொலைக்காட்சி கோபுரத்தைத் தாக்கிய ரஷ்யாவின் செயல் 'காட்டுமிராண்டித்தனமானது' என்று யுக்ரேனிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நாஜியின் ஹோலோகாஸ்ட் காலத்தில் யூதர்கள் பெருமளவில் திரளாக கொல்லப்பட்ட மிகப்பெரிய இடமாக இருப்பது பேபின்யார். இந்த நினைவை கூரும் இடத்துக்கு அருகே தொலைக்காட்சி கோபுரம் உள்ளது. அதைத்தான் ரஷ்ய படையினர் தாக்கியுள்ளனர்.

    குழந்தைகளுக்கான தனி நினைவகம் உட்பட, இறந்தவர்களை நினைவுகூருவதற்காக இந்த தளத்தில் நினைவுச் சின்னங்கள் உள்ளன.

    இந்த சம்பவத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள யுக்ரேனிய வெளியுறவு அமைச்சகம், "ரஷ்ய துருப்புக்கள் #BabynYar நினைவு வளாகத்திற்கு அருகிலுள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. ரஷ்ய குற்றவாளிகள் தங்கள் காட்டுமிராண்டித்தனத்தில் எதையும் நிறுத்துவதில்லை. ரஷ்யா = காட்டுமிராண்டித்தனம்," என்று கூறியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, கீயவ் தொலைக்காட்சி கோபுரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்

    கீயவ் தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்ய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாக யுக்ரேனிய அவசர சேவைகள் அமைப்பு தெரிவிக்கின்றன.

    கீயவ் தொலைக்காட்சி கோபுரம்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, கீயவ் தொலைக்காட்சி கோபுரம்
  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனிய தலைநகர் கீயவில் இந்திய தூதரகம் மூடப்பட்டதாக அறிவிப்பு - மாற்று இடத்தில் தூதரக பணிகளை திறக்க நடவடிக்கை

    யுக்ரேன் தலைநகர் கீயவில் ரஷ்ய படையினர் தாக்குதலைத் தொடங்கியிருக்கும் நிலைியல், அங்கிருந்த இந்தியர்கள் அனைவரும் வெளியேறி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த நகரில் இயங்கி வந்த இந்திய தூதரகமும் மூடப்பட்டதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மாற்று இடத்தில் தூதரக பணிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  5. யுக்ரேனிய மருத்துவ படிப்பை இந்திய மாணவர்களால் மீண்டும் தொடர முடியுமா

    ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர்
    படக்குறிப்பு, ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர்

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஆறாவது நாளாக நீடித்து வரும் நிலையில், அங்கு கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குரியதாகியுள்ளது.

    ` மாணவர்களின் நலன்களைக் காக்கும் வகையில் அவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்க வேண்டும்' என கல்வியாளர்கள் சிலர் பேசி வருகின்றனர்.

    ``அவ்வாறு இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் யுக்ரேனில் பாதி மருத்துவ படிப்பை படித்த இந்திய மாணவர்களை அனுமதிப்பது நடைமுறையில் சாத்தியம்தானா?'' என்பது குறித்து மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியுடன் பிபிசி தமிழ் நேர்காணல் நடத்தியது அதை படிக்க இங்கே சொடுக்கவும்

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, கீயவ் தொலைக்காட்சி கோபுரம் மீது தாக்குதல்

    கீயவ் தொலைக்காட்சி கோபுரம்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, கீயவ் தொலைக்காட்சி கோபுரம்

    கீயவில் உள்ள தொலைக்காட்சி கோபுரம் மீது ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு மிகப்பெரிய புகை மூட்டம் வெளிப்படுவதை காணொளியில் பார்க்கிறோம்.

    பிபிசி அந்த காட்சிகளை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் கோபுரம் நேரடியாக தாக்கப்பட்டதா? என்பது தெளிவாக தெரியவில்லை. மற்ற காட்சிகள் அப்பகுதியில் வெடிப்பு நடந்துள்ளதை தெரியப்படுத்துகிறது.

    முன்னதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் யுக்ரேனிய தலைநகரில் உள்ள இலக்குகளை தாக்க தயாராகி வருவதாக கீயவ் குடியிருப்பாளர்களை எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  7. யுக்ரேன் Vs ரஷ்யா: போர் சூழலை விளக்கும் கள படங்கள்

    கார்கிவ் - இடிபாடுகளுக்குள் சடலங்கள், காயம் அடைந்தவர்களை தேடும் அவசரகால மீட்புக்குழு

    பட மூலாதாரம், REUTERS

    படக்குறிப்பு, கார்கிவ் - இடிபாடுகளுக்குள் சடலங்கள், காயம் அடைந்தவர்களை தேடும் அவசரகால மீட்புக்குழு
    கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள்

    பட மூலாதாரம், REUTERS

    படக்குறிப்பு, கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள்
    ரஷ்ய படையெடுப்பிலிருந்து தப்பி வெளியேறிய யுக்ரேனிய பெண் போலாந்தின் ப்ரெஸ்மிஸ்லில் உள்ள ஒரு தற்காலிக முகாமில் தன் குழந்தையை கட்டியணைத்தபடி சோகத்தில் உறைந்திருக்கிறார்.

    பட மூலாதாரம், REUTERS

    படக்குறிப்பு, ரஷ்ய படையெடுப்பிலிருந்து தப்பி வெளியேறிய யுக்ரேனிய பெண் போலாந்தின் ப்ரெஸ்மிஸ்லில் உள்ள ஒரு தற்காலிக முகாமில் தன் குழந்தையை கட்டியணைத்தபடி சோகத்தில் உறைந்திருக்கிறார்.
    கீயவின் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறும் முன் தன் மகளைக் கண்ணீர்மல்க கட்டியணைத்து விடை கொடுக்கும் தந்தை

    பட மூலாதாரம், AFP

    படக்குறிப்பு, கீயவின் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறும் முன் தன் மகளைக் கண்ணீர்மல்க கட்டியணைத்து விடை கொடுக்கும் தந்தை
    தாக்குதலை எதிர்கொள்ள பாட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் குடிமக்கள்

    பட மூலாதாரம், REUTERS

    படக்குறிப்பு, தாக்குதலை எதிர்கொள்ள பாட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் குடிமக்கள்

    யுக்ரேனில் 6ஆம் நாளாக ரஷ்ய படைகளின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில இடங்களில் யுக்ரேனிய படையினரும் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில், யுக்ரேனின் தலைநகர் கீயவில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை விளக்கும் சமீபத்திய படங்களின் முழுமையான தொகுப்பை பார்க்க இங்கே சொடுக்கவும்

  8. ரஷ்யாவின் உளவியல் தாக்குதல்- எச்சரிக்கும் யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர்

    யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ்

    கீயவ் தாக்குதல்கள் குறித்து ரஷ்யா எச்சரித்துள்ள நிலையில், யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், ரஷ்யாவால் "உளவியல் தாக்குதல்" ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தகவல் தொடர்புகளை சீர்குலைக்க ரஷ்யா முதலில் திட்டமிட்டதாக கூறியுள்ளார். அதன் பிறகு, யுக்ரேனிய ராணுவம்-அரசியல் தலைமை சரணடைவதற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் போலிச் செய்திகள் பெருமளவில் விநியோகிக்கப்படும்" என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    "போலிச் செய்தியை நிரூபிக்க, அவர்கள் கையெழுத்திட்ட ஆவணங்களின் புகைப்படங்களையும், போலி வீடியோவையும் வெளியிடுவார்கள். அவை பொய்" என்று ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறியுள்ளார்.

  9. யுக்ரேனில் சமீபத்திய நிலவரம் என்ன?

    ரஷ்யாவின் யுக்ரேனிய படையெடுப்பு ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடித்து வருகிறது. அதன் சமீபத்திய தகவல்கள் இதோ.

    • கார்கிவ் - யுக்ரேனின் இரண்டாவது நகரம். இங்கு ரஷ்ய படையினர், பிராந்திய அரசாங்கத்தின் தலைமையகத்தை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல குடியிருப்புகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.
    • யுக்ரேன் அதிபர் இந்த தாக்குதலை "அரசு பயங்கரவாதம்" என்று அழைத்துள்ளார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு படையெடுப்பால் குடியிருப்பு பகுதிகள் தாக்கப்பட்டு 16 குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்ட ரஷ்யாவின் செயல், போர்க்குற்றம் என்று வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டினார்.
    • ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உரையாற்றிய ஸெலென்ஸ்கி, யுக்ரேன் தொடர்ந்து தமது மன உறுதியில் உறுதியாக இருக்கும் என்றார். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக விரைவில் தமது நாடு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
    • வடகிழக்கு நகரமான ஓக்டிர்காவில் ரஷ்ய பீரங்கித் தாக்குதலில் 70 யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
    • யுக்ரேன் தலைநகர் கீவை நோக்கி ரஷ்ய கவச வாகனங்களின் பெரும் தொகுப்பு முன்னேறி வரும் காட்சிகள் செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
    • ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃப், அணு ஆயுதங்களை வாங்கும் யுக்ரேனின் முயற்சியை தடுக்கவே அதன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் காணொளி காட்சி வழியாக பேசினார்.
    • ரஷ்யாவின் செயல்பாட்டை "காட்டுமிராண்டித்தனமான மற்றும் கண்மூடித்தனமான" தாக்குதல் நடவடிக்கை என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குற்றம்சாட்டியிருக்கிறார். ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தீவிரப்படுத்த தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

  10. யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு சம்பந்தமான செய்திகளை கடந்த 5 நாட்களாக பிபிசி தமிழ் வழங்கிய நேரலை பக்கங்கள்

    தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டுவரும் இந்த நேரலைப் பக்கங்கள் இந்தப் படையெடுப்பில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் அனைத்தையும் காலவரிசைப் படி பார்ப்பதற்கான ஒரு மூலாதாரமாக விளங்கும்.

    • யுக்ரேன் மீது போர் தொடுத்த ரஷ்யா: முதல் நாள் போரில் நடந்தது என்ன? - நேரலை செய்தி
    • போரில் இரண்டாம் நாள் நடந்தது என்ன? நேரலைச் செய்தி
    • போரில் மூன்றாம் நாள் நடந்தது என்ன? நேரலைச் செய்தி
    • யுக்ரேன் போரின் நான்காவது நாளில் நடப்பது என்ன? - நேரலை
    • யுக்ரேன் மீதான ரஷ்ய ஐந்தாவது நாள் தொடர்ந்த படையெடுப்பு பெலாரூஸில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை.
  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, கீயவில் உள்ள இலக்குகளை தாக்குவோம் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    கீயவில் உள்ள ராணுவம், உளவுத்துறை இலக்குகளை தாக்குவோம் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

    யுக்ரேன் தலைநகரில் உள்ள முக்கிய இலக்குகளை தாக்க தயாராகி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

    அந்த கட்டடங்கள் அருகே வாழும் குடியிருப்புவாசிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ரஷ்ய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறிப்பில், ரஷ்ய படைகள் 'யுக்ரேனிய பாதுகாப்பு சேவையின் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் கீயவில் உள்ள 72வது முக்கிய நடவடிக்கை மையத்திற்கு' எதிராக 'உயர் துல்லிய தாக்குதல்" நடத்த தயாராகி வருகின்றன. எனவே ரஷ்யாவிற்கு எதிராக ஆத்திரமூட்டல்களை மேற்கொள்ள தேசியவாதிகளால் பயன்படுத்தப்படும் யுக்ரேனிய குடிமக்களும் தாக்குதல் இலக்கு பகுதிகளுக்கு அருகே வசிக்கும் கீயவ் குடியிருப்புவாசிகளும் தங்களுடைய வீட்டை விட்டு வெளியேறுங்கள் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "ரஷ்யாவிற்கு எதிரான தகவல் தாக்குதல்களைத் தடுக்க" இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அதன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  12. யுக்ரேனில் நவீனின் கடைசி நிமிடங்கள் - "காலையில் பணம் கேட்டான், பிற்பகலில் கொல்லப்பட்டான்" - கதறும் நண்பர்கள்

    யுக்ரேனில் நவீனின் கடைசி நிமிடங்கள் -

    பட மூலாதாரம், SHEKARAPPA

    யுக்ரேனின் கார்கிவ் பகுதியில் நடந்த தாக்குதலில் இன்று கொல்லப்பட்ட இந்திய மருத்துவ மாணவர் நவீன் எஸ் ஞானகெளடர், இறப்புக்கு முன்பு உணவு வாங்க போதிய பணம் இல்லாததால் அதை பரிமாற்றம் செய்யும்படி கேட்டிருந்தார் என அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட தகவலால் கர்நாடகாவிலும் யுக்ரேனிலும் வாழும் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    கார்கிவ் அடுக்குமாடி குடியிருப்புக்கு அடித்தளத்தில் உள்ள பங்கர் அறையில் இருந்தபடி ஸ்ரீகாந்த் என்ற மருத்துவ மாணவர், பிபிசி ஹிந்தியிடம் நவீனுடனான கடைசி நிமிட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்..

  13. கார்கிவ் பகுதியில் ரஷ்ய ஏவுகணை எங்கே பாய்ந்தது என விளக்கும் வரைபடம்

    BBC

    இந்த வரைபடத்தில் ரஷ்ய தாக்குதலுக்குள்ளான மத்திய கார்கிவில் உள்ள சுதந்திர சதுக்கம் (Freedom Square) எங்கு உள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    ரஷ்ய தாக்குதலுக்குள்ளான பகுதி சிவப்பு நிற பெரும் புள்ளி வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. யுக்ரேனின் கார்கிவ் பகுதியில் நடந்த தாக்குதலில் சுமார் 10 பேர் கொல்லப்பட்டனர்.

    மத்திய சதுக்க பகுதி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ரஷ்ய படைவீரர்கள் நடத்திய தாக்குதலின் விளைவாக பாதிப்புக்குள்ளான கார்கிவின் மத்திய சதுக்க பகுதி

    கிழக்கு யுக்ரேனின் கார்கிவ் நகரின் மத்தியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த தகவலை மாநில அவசரகால சேவையிலிருந்து தெரிவித்ததாக யுக்ரேனிய செய்தி நிறுவனமான இன்டர்ஃபேக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

  15. யுக்ரேன் - ரஷ்யா மோதல் குறித்து நேரலை

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, "யுக்ரேனியர்கள் தங்கள் நிலத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும், வாழ்க்கைக்காகவும் போராடுகிறார்கள்" - யுக்ரேன் அதிபர்

    யுக்ரேன் ரஷ்யா வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    பட மூலாதாரம், Zelensky Instagram

    படக்குறிப்பு, வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, யுக்ரேன் அதிபர்

    ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பங்கேற்ற யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி சற்றுமுன் உரையாற்றினார்.

    அவர் பேசுகையில், எங்கள் நாட்டில் நடப்பது துயரம். யுக்ரேனியர்கள் தங்கள் நிலத்திற்காகவும், தங்களின் சுதந்திரத்திற்காகவும், வாழ்க்கைக்காகவும் போராடுகிறார்கள் என்று கூறினார்.

    "யாரும் எங்களை பிரிக்க முடியாது. மன உறுதியை குலைக்க முடியாது. ஏனென்றால் நாங்கள் யுக்ரேனியர்கள்," என்றார் ஸெலென்ஸ்கி.

    மேலும் அவர், யுக்ரேனிய குழந்தைகளை ரஷ்யா இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகவும், நேற்று வரை 16 பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டார்.

    "நீங்கள் எங்களுடன் துணை இருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கவும்", யுக்ரேனை அவர்களால் வீழ்த்த முடியாது என்பதையும், நாங்கள் "உண்மையான ஐரோப்பியர்கள்" என்பதையும் நிரூபியுங்கள் என்று அவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அழைப்பு விடுத்தார்.

    இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் இருக்கையை விட்டு எழுந்து கைதட்டினார்கள்.

    அதிபர்

    பட மூலாதாரம், European Parliament

    படக்குறிப்பு, இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் இருக்கையை விட்டு எழுந்து கைதட்டினார்கள்.
  17. யுக்ரேனில் இருந்து இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு

    யுக்ரேனை விட்டு இதுவரை வெளியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை 9,000க்கும் மேல் உள்ளதாகவும், தற்போது யுக்ரேனில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 8,000 முதல் 9,000 பேர் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    யுக்ரேனின் கிழக்கு பகுதியில் 4,000 இந்தியர்களும், மேற்கு பகுதியில் 4,000 முதல் 5,000 பேரும், யுக்ரேனை கடந்தவர்கள் 5,800 பேர் என்றும் இதில் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இதுவரை 2,000க்கும் மேலான இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பிபிசியின் தெற்கு ஆசியா செய்தியாளர் ரஜினி வைத்தியநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை பகிர்ந்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனின் அணு ஆயுதம் வாங்கும் முயற்சியை அனுமதிக்க மாட்டோம் - ஐ.நா அமர்வில் ரஷ்யா

    யுக்ரேன் ரஷ்யா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, செர்கே லாவ்ரோஃப், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்

    அணு ஆயுதங்களை வாங்கும் யுக்ரேனின் முயற்சியை அனுமதிக்க மாட்டோம் - ரஷ்ய வெளியுறவுத்துறை

    அணு ஆயுதங்களை வாங்க யுக்ரேன் முயற்சித்து வருவதாகவும் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியிருக்கிறார் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கோ லாவ்ரோஃப்.

    யுக்ரேனின் செயல்பாடு மிகப்பெரிய அச்சுறுத்தல் மற்றும் அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

    "யுக்ரேனில் இன்னும் சோவியத் அணுசக்தி தொழில்நுட்பம் உள்ளது. எனவே இந்த அச்சுறுத்தலுக்கு ரஷ்யாவே வெற்றிகரமாக பதிலளிக்க வேண்டும், என லார்வோஃப் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

    ஐ.நா பொதுச்சபை அமர்வில் பதிவு செய்யப்பட்ட செர்கே லாவ்ரோஃபின் உரை ஒளிபரப்பப்பட்டது. அதில் "முன்னாள் சோவியத் யூனியனின் நாடுகளில் மேற்கத்திய நாடுகள் ராணுவ தளங்களை கட்டக்கூடாது," என அவர் எச்சரித்தார்.

    அணு ஆயுதங்களை வாங்கும் யுக்ரேனின் முயற்சியை ரஷ்யா தடுத்து நிறுத்தும் என்றும் லாவ்ரோஃப் கூறினார். எனினும், அதே அமர்வில் இடம்பெற்ற யுக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரி குலேபா, யுக்ரேனில் கண்மூடித்தனமாக ரஷ்யா தாக்குதல்களை நடத்தி போர்க்குற்றம் இழைப்பதாக குற்றம்சாட்டினார்.

    ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு அணுகுமுறையையும் படுகொலை ஆயுதங்களைப் பயன்படுத்துவதையும் நிறுத்த சிறப்பு அமர்வைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் டிமிட்ரி குலேபா வலியுறுத்தினார்.

    "யுக்ரேனில் குடியிருப்பு கட்டடங்கள், மழலையர் பள்ளிகள், ஆதரவற்றோர் காப்பகங்கள், மருத்துவமனைகள், அவசரகால வாகனங்கள், பயணிகள் பேருந்துகள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் என எல்லோரையும் இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்துவதில் எந்த நியாயமும் இல்லை," என்று குலேபா கூறினார்.

  19. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்யாவின் படையெடுப்பால் பத்து லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக தகவல்

    ரஷ்ய படையெடுப்பால் யுக்ரேனில் இருந்து சுமார் 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என்று அகதிகளுக்கான ஐநாவின் அமைப்பு தெரிவித்துள்ளதாக ஏ எஃ பி செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. யுக்ரேனில் இருந்து படிப்பை பாதியில் கைவிட்டு வந்தவர்களின் நிலை என்ன? - கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியுடன் நேரலை