அண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப் போட்ட சி.என். அண்ணாதுரை

காணொளிக் குறிப்பு, அண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப் போட்ட சி.என். அண்ணாதுரை

1909 செப்டம்பர் 15ம் தேதி இந்தப் பெயருக்கு உரியவர் காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தபோது அது அடுத்த தெருவுக்கு கூட செய்தி இல்லை. நடராஜன் - பங்காரு அம்மாள் இணையருக்கு ஒரு மகன். அவ்வளவுதான்.

1969 பிப்ரவரி 3-ம் தேதி அவர் இறந்தபோது அது பல கோடி மக்களுக்குப் பெருந்துயரம்.

அண்ணாவின் இறுதி ஊர்வலத்துக்காக சென்னையில் குவிந்தவர்கள் எண்ணிக்கை 1.5 கோடி என்று மதிப்பிடப்பட்டது. இந்த எண்ணிக்கை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் பதிவானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: