You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆன்லைன் லோன் ஆப் மோசடி: 2 சீனர்கள் உள்பட 4 பேர் சென்னையில் கைது
ஆன்லைன் லோன் ஆப் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக 2 சீனர்கள் உள்பட 4 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த கணேசன் என்பவர் சென்னை போலீசின் கந்துவட்டி தடுப்புப் பிரிவில் அளித்த புகாரின் பேரில் ஆன்லைன் லோன் ஆப் நடத்திவந்த நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருவதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கைதான இரண்டு சீனர்கள், பாஸ்போர்ட் காலாவதியான பிறகும் இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் இருந்துள்ளனர் என்றும் அவர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு, அவர்கள் வைத்திருந்த ரூ.2.4கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பொது மக்கள் ஆன்லைன் லோன் ஆப் பற்றி விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என்றும் ஏமாற்றப்பட்டால் உடனே புகார் கொடுக்கவேண்டும் என்றும் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார். ''கைதான இரண்டு சீனர்கள் மற்றும் இரண்டு இந்தியர்களிடம் இருந்து 21 லேப்டாப், 20 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் லோன் ஆப் நிறுவனங்களில் பெரும்பாலும் சீனர்களுக்கு தொடர்பு உள்ளது,''என்றார் அவர்.
பிற செய்திகள்:
- ஒழிக்கப்படுகிறதா இலங்கை மாகாண சபைகள்? - கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்
- சிவப்பு எறும்பு சட்னி: கொரோனாவிலிருந்து பாதுகாக்குமா? - ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
- கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த பரிந்துரை - அடுத்த நடைமுறை என்ன?
- "பாஜக அதிமுகவிற்கு நண்பேன்டா" - மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ புதிய விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்