கங்கனா ரனாவத்தை பகத் சிங்குடன் ஒப்பிடும் விஷால் - 1920இல் பகத் சிங் என்ன செய்தார்?
மும்பையில் ஆளும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கு சவால் விடும் வகையில் காணொளியை வெளியிட்டு எதிர்ப்பைப் பதிவு செய்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் செயலை, 1920களில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் செயலுடன் ஒப்பிட்டு தமிழ் திரைப்பட நடிகர் விஷால் டிவிட்டரில் பாராட்டிய விவகாரம் அவருக்கு எதிரான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் தீவிரமாக்கியிருக்கிறது.
இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஷால், "உங்களுடைய துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு என்பது பற்றி குரல் கொடுக்க ஒருமுறைக்கு இரு முறை கூட நீங்கள் யோசித்திருக்கவில்லை. இது உங்களுடைய தனிப்பட்ட பிரச்னை கிடையாது. ஆனாலும், அரசின் கோபத்தை எதிர்கொண்டு வலுவுடன் நீங்கள் நின்றது மிகப்பெரிய உதாரணமாகும். இது 1920களில் பகத் சிங் செய்ததற்கு ஒப்பாகும். பிரபலங்கள் மட்டுமல்ல, சாதாரண மனிதர் கூட, ஒரு விஷயம் சரியில்லாதபோது அரசாங்கத்துக்கு எதிராகப் பேச இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும். உங்களுக்கு என் வாழ்த்துகள், தலைவணங்குகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" என்று கூறி பேச்சு சுதந்திரம் (அரசியலமைப்பு 19ஆவது விதி) என்று விஷால் குறிப்பிட்டிருந்தார்.
பிற செய்திகள்:
- அமெரிக்காவை உலுக்கும் காட்டுத்தீ: 30க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சேதம்
- சீனா விஷயத்தில் நேரு செய்த அதே தவறை பிரதமர் மோதியும் செய்கிறாரா?
- கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் தங்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்?
- இஸ்ரேல் – பஹ்ரைனுக்கு இடையே உடன்படிக்கை - வரலாற்று முக்கியத்துவம் பெறுவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: