AN - 32 விமானம்: காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Reuters
இந்திய விமானப்படையின் AN-32 விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
AN-32 ரக விமானத்தை கடந்த எட்டு நாட்களாக காணவில்லை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அந்த விமானத்தில் 13 பேர் இருந்தனர். விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து விசாரித்து வருவதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. மீட்பு பணி தொடர்ந்து வருவதாகவும், மேலும் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது?
இந்திய விமானப்படையின் AN-32 விமானம் அசாம் ஜோர்ஹட் தளத்தில் இருந்து, கடந்த ஜூன் 3ஆம் தேதி 12:25 மணிக்கு புறப்பட்டது.
கடைசியாக 13:00 மணிக்கு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த இந்த விமானம் பின்னர் தொடர்பை இழந்தது.
விமான தளத்தை அந்த விமானம் அடையவில்லை என்பதால் இந்திய விமானப்படை இது தொடர்பான விசாரணையை தொடங்கியது.
செவ்வாயன்று ஒன்பதாவது நாளாக அந்த விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












