You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மம்தா பானர்ஜி கட்சியிலிருந்து பாஜவுக்கு அணி மாறும் எம்.எல்.ஏக்கள்
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அணி மாறுவது தொடர்ந்து வருகிறது.
இன்று புதன்கிழமை முனிருல் இஸ்லாம் எனும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பாஜகவுக்கு கட்சி தாவியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி 2017இல் பாஜகவில் இணைந்த முகுல் ராயின் மகன் சுப்ரான்ஷு ராய் மற்றும் துஷார் காண்டி பட்டாச்சார்யா ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து இன்று இந்த நிகழ்வு நடந்துள்ளது.
"தீதியின் (மம்தா பானர்ஜி) அகந்தையால் திரிணாமுல் காங்கிரசில் உட்கட்சி பூசல் நிலவுகிறது. மோதியின் தலைமையின்கீழ் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவோம்," என்று முகுல் ராய் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவேந்திர ராய் எனும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் பாஜகவில் இணைந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 18 இடங்களிலும், திரிணாமுல் 22 இடங்களிலும் வென்றன. 2014இல் பாஜக அங்கு இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்