நரேந்திர மோதிக்கு எதிராக வாரணாசியில் 111 தமிழக விவசாயிகள் போட்டி

பட மூலாதாரம், BJP
மக்களவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோதி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், அவருக்கு எதிராக 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.
"கடந்த தேர்தலில், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, நதிகள் இணைப்பு, விவசாயக் கடன்களுக்கு தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பிரதமர் மோதி அளித்தார். ஆனால், எதையும் நடைமுறைப்படுத்தவில்லை.
டெல்லியில் இதற்காக 100 நாட்களுக்கும் மேல் போராட்டம் நடத்தினோம். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எங்களை ஐந்து முறை சந்தித்தார். லாபகரமான விலை வாங்கி தருவதாகவும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். ஆனால் இதுவரை எதையும் செய்யவில்லை" என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிளம்பி, ஏப்ரல் 24ஆம் தேதி வாரணாசி செல்லவுள்ளதாகவும், வேட்புமனு தாக்கல் செய்ய பணம் வேண்டும் என்பதால், அங்கே பிச்சையெடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
"ஏப்ரல் 25ஆம் தேதியன்று பிரதமர் மோதிக்கு எதிராக அனைத்து விவசாயிகளும் வேட்புமனு தாக்கல் செய்வோம்" என்று அவர் மேலும் கூறினார்.
இதன் மூலமாக தாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அப்பகுதி மக்களுக்கு காண்பிப்போம் என்றும், தங்களுக்கு அனைத்து மாநில விவசாயிகளின் ஆதரவு உள்ளதாகவும் அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












