‘தே.மு.தி.கவுடன் கூட்டணி இல்லை’ - திமுக தொகுதி பங்கீடு நிறைவு: மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
மதிமுகவுடனான தொகுதி பங்கீட்டிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறாக கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகளும், இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 1 தொகுதியும், கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு 1 தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 1 தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது.
மதிமுகவுக்கு மக்களவையில் ஒரு தொகுதியும், மாநிலங்களவையில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வருகின்ற சட்டமன்ற தொகுதியிலும் திமுகவுடன் கூட்டணி தொடருமென பத்திரிகையாளர்களை சந்தித்த வைகோ தெரிவித்தார்.
திமுகவின் தொகுதி பங்கீடு நிறைவடைந்ததாக ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து தேமுகவுடன் திமுக கூட்டணி இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தது போக, திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












