You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரைத் தடுத்து நிறுத்த இந்தியா முடிவு
பாகிஸ்தானுக்கு செல்கின்ற நீரை நிறுத்திவிட இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
இது இந்திய அரசின் நீண்டகாலத் திட்டமாகும். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு உடனடியாக பாதிப்பு எதுவும் ஏற்படாது.
இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஆறுகளில் இருந்து தண்ணீரை திருப்பி ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்ததாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ரவி ஆற்றில் ஷாக்பூர்-கான்ட் அணை கட்டுமானம் தொடங்கிவிட்டது. யு.ஜே.ஹெச் பணித்திட்டம் நமது பங்கு நீரை சேமித்து வைத்து ஜம்மு - காஷ்மீரின் தேவைக்கு பயன்படுத்தப்படும். இரண்டாவது ரவி, பியஸ் நதிகளில் இருந்து பாயும் நீர் பிற கழிமுக பகுதிகளுக்கு வழங்கப்படும் என்று நிதின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணித்திட்டங்கள் எல்லாம் தேசிய பணித்திட்டங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மூன்றாவது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
பிபிசி இந்திய அரசின் தரப்பைத் தொடர்பு கொண்டபோது, மழை பெய்கிறபோது, இந்தியாவின் கிழக்கிலுள்ள மூன்ற ஆறுகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் பாகிஸ்தானுக்கு செல்கிறது.
ஷாக்பூர் அணையின் கட்டுமானப்பணிகள் தொடங்கிவிட்டன (புல்வாமா தாக்குதலுக்கு முன்னரே). இரண்டாவது அணை அமைச்சரவையால் அனுமதிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்