“குழந்தைகள் மீதான அத்துமீறலை தடுக்க சட்ட நடைமுறையும், விழிப்புணர்வும் அவசியம்”
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தால் மரண தண்டனை என அவசர சட்டம் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், PTI
இதனால் குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் குறையுமா? விழிப்புணர்வும் அணுகுமுறையும் மேம்படுவதுதான் தீர்வாகுமா? என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு பிபிசி நேயர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள கருத்துக்களை இங்கே தொகுத்து வழங்குகின்றோம்.
சக்தி சரவணன் என்கிற நேயர், கடுமையான தண்டனைகளுக்குரிய சட்டத் திருத்தங்கள் தேவை என்றாலும், பாலியல் கல்வியை நடைமுறைப் படுத்தல், கவர்ச்சியை முன்னிலைப்படுத்திப் பெருகிவரும் ஊடக நிகழ்ச்சி மற்றும் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள், உரிய இட ஒதுக்கீட்டை அமல்படுத்தல், இணையத்தில் பரவி கிடக்கும் ஆபாசங்களை ஒழுங்குபடுத்தல் போன்றவற்றிலும் அரசு கவனம் செலுத்தி உரிய விழிப்புணர்வையும், நடவடிக்கையையும் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார்.
தர்ஷினி லியோ என்கிற நேயர் டுவிட்டர் பக்கத்தில், சட்டம் மட்டும் போடுவதால் எந்தப்பயனும் கிடையாது. அதை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். அமுலுக்கு வரும்போதுதான் அதன் மீதான பயம் வரும் என்று கருத்து கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
கிருஷ்ணமூர்த்தி செல்வா, ஒருவனுக்கு மரண தண்டனை அளிப்பது என்பது, மனிதனை மீறிய செயல், எந்த காலத்திலும் ஒரு மனிதனை ஒரு மனிதனே கொலை செய்வது அநாகரீகமான செயல். ஒருவன் குற்ற செயல்கள் செய்து விட்டான் என்றால், அவனை உண்மையான அரசியல் தலையீடு மற்றும் அதிகார தலையீடு இல்லாமல் நீதி விசாரணை செய்யவேண்டும். அவன் குற்றவாளி என்றால், ஜாமீன் இல்லா ஆயுள் தண்டனை தரலாம் என்று மரண தண்டனைக்கு எதிரான தன்னுடைய கருத்தை கூறி, ஆலோசனையும் பதிவிட்டுள்ளார்.

துரை முத்துசெல்வம் என்கிற நேயர், சட்டங்கள் இயற்றப்படுவதால் குற்றங்கள் குறையுமே தவிர குற்றங்கள் நிகழ்வதை தடுக்க முடியாது. எனவே மக்களுக்கு இந்த விவகாரத்தில் அரசு விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும். குற்ற சம்பவம் ஏன்,எப்படி நடந்ததது என ஆராய்ந்து, அதற்கான காரணங்களை களைந்தால் நிலமைகள் மேம்படும்.
கடுமையான தண்டனைகள் குற்றத்தை குறைக்கும். ஆனால் அது வெறும் எழுத்தால் மட்டும் இருந்துவிடக்கூடாது என்பது மோகத் ஜவ்காடாத்தின் டுவிட்டர் பதிவாகும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
துரைராஜா துஷியந்தன் என்கிற நேயர், அதென்ன 12 வயதுக்கு கீழ்? பெண்களின் மீதான அத்துமீறல் வயதெல்லை ஏதுமின்றி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை கூறியுள்ளார்,
பெண்களை பாலியல் வல்லுறவு செய்வோருக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும். பெண்களை வயது கொண்டு வித்தியாச படுத்தகூடாது என்கிறார் அப்துல் வஹாப்பின்.
கடுமையான தண்டனைகள் மட்டுமே குற்றங்கள் குறைய ஒரே தீர்வு என்று அகிலன் என்னும் நேயர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவுக்கு இந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கிறார் சிவகுமார்.

பட மூலாதாரம், EPA
செந்தில் விஜி என்கிற நேயர், தண்டனை விவரம் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர நிரந்தர விளம்பரம் செய்ய வேண்டும். பாடதிட்டத்திலும் எந்த குற்றதிற்கு என்ன தண்டனை என சேர்க்க வேண்டும் என்ற கருத்தை வைத்துள்ளார்.
நித்திய குமார் என்ற நேயர், சட்டம் மட்டும் முக்கியமான ஒன்றல்ல. அதன் செயல்பாடுகளே மிகவும் முக்கியம் என்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
சட்டமெல்லாம் சரிதான், அதை அமல்படுத்துவதிலும், காலதாமதத்திலும் வழக்கு நீர்த்துப் போகுமே. சட்டத்தோடு, விழிப்புணர்வும் வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்துள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியம்.
கோகுள் ராஜ் என்கிற நேயர், நிச்சயம் தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் ,அதனால் குற்றங்கள் ஓரளவுக்கேனும் குறைவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கிறது என்று கூறியுள்ளார்
கடுமையான சட்டம் வரவேற்க வேண்டியது என்கிறார் ஆன்றனி பால்ராஜ்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
வெங்கட் என்பவர், இதற்கு தீர்வு தண்டனை அல்ல . சமூகத்தின் விழிப்புணர்வு தான் குற்றங்களை குறைக்கும் என்ற கருத்தை கொண்டுள்ளார்.
இது ஒரு நோய் , இதற்கு தீர்வு தண்டனை அல்ல. சமூகத்தின் விழிப்புணர்வு தான் குற்றங்களை குறைக்கும் என்று அருள் பிரான்சிஸ் கூறியுள்ளார்,
உதிரசாமி என்ற நேயர், சட்டம் பிறப்பிப்பது ஒன்றும் பெரிதல்ல அதை செயல்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்,
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
பிற செய்திகள்:
- வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன?
- வட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும்: கிம் ஜாங்-உன் அறிவிப்பு
- தச்சுக் கலையை காதலிக்கும் அப்பர் லட்சுமணன் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை என்ன?
- ஆபாச கருத்து விவகாரம்: எஸ்.வி. சேகர் வீடு மீது தாக்குதல்
- #தமிழ்தேசியம்: சாதியை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் சாத்தியமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












